04 February 2011

”அண்ணன் ஏன் சாகனும்; நான் சாகிறேன்”


ஈழத்தில் போரை நிறுத்த வலியுறுத்தி எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சனவரி15ஆம் நாள் உண்ணாநிலை அறப்போரை மறைமலைநகரில் தொடங்கிய அந்த எழுச்சிநாளில் மேடைக்கு அருகிலேயே நின்றிருந்தான் தம்பி முத்துக்குமார்.

வன்னிஅரசண்ணா அண்ணன உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லுங்க நான் சாகிறேன்என்றான்.


03 February 2011

கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன?


கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? கருத்துத் திணிப்பு வன்முறையாளர்களுக்கு பதிலடி!
- வன்னிஅரசு

""உயரிய நோக்கத்திற்காக பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை துரோகிகளும் எதிரிகளும் திசைமாற்ற நினைப்பார்கள். அவற்றையயல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இலக்கை அடைய முடியும்!''
மேதகு பிரபாகரனின் இந்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் பயணித்துக்கொண்டிருக்கிறது. சாதியற்ற தமிழ்த்தேசம் படைக்க தமிழ்நாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகளாய் களமாடிக் கொண்டிருக்கிறோம்.