28 November 2012

ம.க.இ.க. ‘புரட்சி’யாளர்களே - இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புகிறது?

''டே ஆறுமுகம் அப்படியே டெரரா மூஞ்சிய வச்சுக்க. அப்பதான் இவனுகள்ளாம் பயப்படுவானுங்க. கண்ண உருட்டி இன்னும் விறைப்பா மூஞ்சிய வைடா'' வெடிகுண்டு முருகேசன
் திரைப்படத
்தில் நடிகர் வடிவேலுவிடம் காமெடி செய்வார் கதாநாயகன் பசுபதி. அதுபோல காமெடி செய்கிறார்கள் நக்சல்பாரிகள் என்று தங்களுக்குத் தாங்களே பிதற்றிக் கொள்ளும் ம.க.இ.க. குழுவினர். 'டெரரா' எப்படி மூஞ்சிய வடிவேலு காட்டுகிறாரோ அதைப் போல புரட்சி, நக்சல்பாரி என்று மூஞ்சியக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ம.க.இ.க. கும்பல்.

நக்சல்பாரி புரட்சியாளர்கள் என்று குறுந்தகட்டிலே பேசுவது, சுவர்களில் எழுதித் தள்ளுவது, புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களில் விளம்பரங்கள் செய்ததைத் தவிர வேறு எங்கு புரட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி உழைக்கும் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் நிலங்களை ஒப்படைத்து அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருவதாக ஆந்திர நக்சல்பாரிகள் பற்றி அறிய முடிகிறது. இதே போல் பீகார், சட்டீஸ்கர், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் மாவோயிஸ்ட்டுகள் ஆதிகுடிகளுக்கு, அதாவது அந்த மண்ணின் மைந்தர்களுக்காகப் படை கட்டி ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கமான தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களும் அந்த நக்சல்பாரிப் போராளிகளோடு ஆயுதம் ஏந்தி களத்தில் நிற்பதைத் தொடர்ந்து கவனிக்க முடிகிறது. அரச பயங்கரவாதத்திற்கு எதிராகக் களமாடும் அப்போராளிகளுக்கு வழக்குகளும், சிறைகளுமே பரிசாகக் கிடைக்கின்றன. உச்சக்கட்டமாக மரணங்களையும் தின்று செரிக்கிறார்கள்.

பீகாரில் மாட்டுத் தோலை உரித்ததற்காக 4 தலித்துகளை தோலை உரித்துக் கொன்றனர் இந்துத்துவ நிலவுடமைப் பண்ணையாளர்கள். இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 6 மாதங்களுக்குப் பிறகு கொல்லப்படுகின்றனர்.

இப்படி புரட்சிகரக் குழுக்கள் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களமாடுவதை நினைக்கையில் அப்போராளிகள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. பெருமையாகவும் அதே நேரத்தில் தலைநிமிர்வையும் உருவாக்குகிறது.

தமிழகத்தில் 1957ஆம் ஆண்டில் மாவீரன் இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டதிலிருந்து தருமபுரி நத்தம் சேரியைக் கொள்ளையடித்து தீக்கிரையாக்கிய சம்பவம் வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குறிஞ்சான்குளத்தில் நாயுடு சாதி வெறியர்களால் அன்பு, சுப்பையா உள்ளிட்ட 4 தலித்துகள் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் தலித்துகளின் குலதெய்வமான காந்தாரி அம்மன் சிலை நிறுவ முயற்சி செய்ததுதான். இதே போல மேலூர் - சென்னகரம்பட்டியில் கோவில் சொத்துக்களில் ஏலம் கேட்டதற்காக அம்மாசி, வேலு என்கிற இரு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலவளவில் தேர்தலில் பங்கெடுத்ததற்காக முருகேசன், பூபதி, மூக்கன் ராஜா உள்ளிட்ட 7 தலித்துகள் பேருந்தில் பயணிக்கும்போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் புளியங்குடியில் கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட காந்தி, வெள்ளையன், மதியழகன் ஆகிய மூன்று தலித்துகள் தூங்கும் போது கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இப்படி தலித்துகள் மீதான படுகொலைகள் ஏராளம்.

1995ஆம் ஆண்டு கொடியங்குளமாகட்டும், 1998ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டுப்பட்டியாகட்டும், ஒகலூர் சேரியாகட்டும், கடலூர் - புலியூர் சேரியாகட்டும், 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற சங்கரலிங்காபுரம் சேரியாகட்டும், கோவை காளப்பட்டி சேரியாகட்டும், பரணி புதுச்சேரியாகட்டும் அனைத்துச் சேரிகளுமே நத்தம் சேரியைப் போலவே சாதி வெறியர்களால் சூறையாடப்பட்டன. வழக்கம்போல் பின்னணியில் காவல்துறை இருந்துதான் இவ்வளவும் நடைபெற்றன. அரச வன்முறையும் சாதிய வன்முறையும் சேர்ந்துதான் தலித்துகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. நக்சல்பாரி புரட்சியாளர்கள் என்று சொல்லித் திரியும் ம.க.இ.க.வினர் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய வன்முறைகளுக்கெதிராக பீகார், ஆந்திரா போராளிகள் போல களமாட முடிந்ததா? கண்டித்து சுவரொட்டி ஒட்டுவது என்பது இவர்கள் சொல்வது போலவே சாதாரண ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் செய்கிற வேலைதான்.

அதே வேலையைச் செய்யும் ம.க.இ.க. ‘புரட்சி’யாளர்களை என்னவென்று அழைப்பது? இவர்கள் என்ன புரட்சியைச் செய்து விட்டார்கள்? வழிகாட்டும் பீகார், ஆந்திரத்தைப் போல தமிழகத்தில் ஒரே ஒரு புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார்களா? பிறகு எப்படி இவர்கள் மீது நம்பிக்கை வரும்? குறைந்தபட்சம் மதிப்பாவது வர வேண்டுமே. மாறாக வெறுப்புதான் வருகிறது. போஸ்டர் ஒட்டுவது அல்லது ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில் புதிய கலாச்சாரம் புத்தகங்களைக் கூவிக்கூவி விற்பதுதான் புரட்சி என்று அப்பாவி இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் போல.

தமிழகத்தில் ம.க.இ.க. அமைப்போ அல்லது புரட்சிகர அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் அமைப்புகளோ ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக, நம்பிக்கையை ஊட்டும்விதமாகக் களத்தில் நின்றிருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் தோன்றியிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது.

எத்தனையோ தத்துவங்களும் புரட்சியாளர்களும் தோன்றிய பிறகும் தருமபுரி போன்ற வெறியாட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றால், அதற்காக இந்த புரட்சிகரக் குழுக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டுமே தவிர, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் இயக்கத்தை பிழைப்புவாதக் கட்சி என்றும், ஓட்டுப் பொறுக்கிக் கட்சி என்றும் சொல்வது அறிவுடைமையாகாது.

இவ்வளவு காலம் ஓட்டுப் போடவும், போஸ்டர் ஒட்டவும் பயன்படுத்தப்பட்ட பெரும் மக்கள் திரளை அமைப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

அரசியல் அதிகாரத்தின் பக்கமே தீண்டப்படாத மக்களாக விரட்டியடிக்கப்பட்ட இந்த மண்ணின் மைந்தர்களை ''அதிகாரமும் ஒரு சொத்துதான். அந்த சொத்தில் நமக்குரிய பங்கைக் கைப்பற்ற வேண்டும்'' என்று முழங்குகிற தலைவர் திருமாவளவன் அவர்களின் இந்த முழக்கத்தால் ஆதிக்கக் கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுவது நியாயம். ஓட்டுப் பொறுக்காத புரட்சிகரக் குழுக்களுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது?

ஆயுதம் ஏந்தி போராடி தமக்கான அதிகாரத்தை வென்றெடுப்பது அல்லது சனநாயகரீதியாக தமக்கான அதிகாரத்தை வென்றெடுப்பது - இந்த இரு வழிகள்தான் உழைக்கும் மக்களுக்கான விடுதலை வழிமுறைகள்.

தமிழகத்தில் ஆயுதம் ஏந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை பெருமளவில் வென்றெடுத்தது போலவும், விடுதலைச் சிறுத்தைகள் அதனைத் தடுப்பதுபோலவும் பொய்யான பிம்பத்தை உருவாக்கி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகத் திட்டமிட்டே பரப்புரை செய்து வருகிறார்கள்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் புறக்கணிப்பில் களமாடிய இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள். முதலில் உதிரியான, சிதறடிக்கப்பட்ட தலித்துகளை அமைப்பாக்க வேண்டுமானால், 'தேர்தல் புறக்கணிப்பு' அமைப்பையே புறக்கணித்து விடும் என்பதால்தான் தேர்தலில் பங்கெடுத்தது விடுதலைச் சிறுத்தைகள்.

தேர்தல் புறக்கணிப்பின் போது இந்த புரட்சிகரப் புடுங்கிகள் தலைவர் திருமாவளவன் அவர்களைச் சந்தித்து ஆயுதப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து, அவரது தலைமையை ஏற்றார்களா? அப்போதும் 'ஏகாதிபத்திய எடுபிடிகள்', 'பிழைப்புவாத தலித்துகள்' என்று தலித்துகளை கொச்சைப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, தேர்தல் புறக்கணிப்பின்போது எந்த புரட்சிகரக் குழுக்கள் சிறுத்தைகளைத் தேடி வந்து விவாதித்தது?

அரசியல் அதிகாரத்தைத் தலித்துகள் கைப்பற்றவே கூடாது என்பதுதான் ஆதிக்கச் சாதிகளின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாடுடன் இந்தப் புரட்சிகரக் குழுக்கள் செயல்படுவது சரியா? ஆதிக்கச் சாதியினர் ஓட்டுக் கட்சிகளாக மாறியதற்கும், ஒடுக்கப்பட்ட தலித்துகள் ஓட்டுக் கட்சிகளாக மாறியதற்கும் வித்தியாசம் இல்லையா?

முதலில் அரசியலில் பங்கெடுக்கும் உரிமையே தலித்துகளுக்கு மறுக்கப்படும் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களைக் கொச்சைப்படுத்துவது மறைமுகமாக உரிமைகளை மறுக்கும் சதியல்லாமல் வேறென்ன? சாதி ஒழிப்பும் தமிழ்த் தேசியமும் உயிர்க் கொள்கைகளாகக் கொண்டு செயல்படும் விடுதலைச் சிறுத்தைகளைப் போன்று வேறு ஏதேனும் ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் உண்டா?

உள்ளூர் பண்ணை எடுபிடிகளாக நடத்தப்பட்ட தலித்துகளை தற்போது, ஏகாதிபத்திய எடுபிடிகள் என்று அழைப்பதன் நோக்கம் என்ன? யாருக்காவது எடுபிடிகளாகவே இருக்க வேண்டும் என்கிற நயவஞ்சகமா?

முதலில் உழைக்கும் மக்களிடத்தில் ஆக்கப்பூர்வமான நம்பிக்கையை, பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். அதை விடுத்து நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்று விளம்பரம் செய்வது எந்தப் பயனையும் தராது.

குறைந்தபட்சம் தோழர் தமிழரசன் அவர்களின் சாதி ஒழிப்புக் களத்திலாவது நேர்மையாகச் செயல்படுங்கள்.

இப்போது முக்கிய பிரச்சனைக்கு வருவோம். தருமபுரி வன்முறை வெறியாட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க இவர்களோடு சேர்ந்து ம.க.இ.க-வைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்தார்கள் என்று எழுதியிருப்பது அந்த இயக்கத்தை அவதூறு கிளப்புவதாக எதிர்வினையாற்றுகிறார்கள்.

அ.தி.மு.க., தி.மு.க வரிசையில் ம.க.இ.க.வைச் சேர்த்ததுதான் இந்த கோபத்திற்கு காரணமா? அல்லது குட்டு உடைந்து விட்டதே என்ற அதிர்ச்சி காரணமா?

கடந்த நவம்பர் 4ஆம் நாள் வன்னியர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து பஞ்சாயத்து ஒன்றை நாயக்கன்கொட்டாயில் கூட்டுகின்றனர். இந்தப் பஞ்சாயத்திற்குக் கட்டுப்பட தலித்துகள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர்.

இது குறித்து நத்தம் சேரியைச் சேர்ந்த பொடா பழனிச்சாமி என்கிற தோழர் மற்ற தோழர்களுடன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் புரட்சிகர இயக்கமான ம.ஜ.இ.க. மாநிலச் செயலாளர் தமிழ்வாணன் அவர்களைச் சந்தித்து முறையிடுகிறார்கள். அவரோ தாக்குதல் நடத்துவது குறித்து எச்சரிக்கையும் செய்து விட்டு, ''விவசாயப் பிரச்சினை குறித்து அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போய் தோழர் சித்தானந்தம் அவர்களைப் பாருங்கள்'' என்று நழுவிக் கொள்கிறார். ம.ஜ.இ.க.விலிருந்து (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) பிரிந்து ம.ஜ.இ.அ (மக்கள் ஜனநாயக இளைஞர் அமைப்பு) என்கிற புதிய புரட்சி அமைப்பை நடத்தி வருகிறார் தோழர் சித்தானந்தம். இதே போல் மக்கள் யுத்தக் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பச்சியப்பன் அவர்களிடமும் முறையிடுகின்றனர். அவரும் சாக்குப் போக்குச் சொல்லி கழன்று கொள்கிறார். நத்தம் சேரி தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய பா.ம.க.வைச் சேர்ந்த வி.பி.மதியழகனின் உறவினர்கள்தான் இந்த சித்தானந்தமும் பச்சியப்பனும். இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த வன்னியர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர்.

இப்படியாக புரட்சிகரக் குழுக்கள் நத்தம் சேரித் தாக்குதலுக்குத் துணை போயிருப்பதைத்தான் 'பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும்' கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். மற்றபடி அப்புரட்சிகரக் குழுக்கள் எங்காவது ஆயுதப் போராட்டம் நடத்தி அழித்தொழிப்பு வேலைகள் செய்ததை நான் தடுக்கவும் இல்லை, கொச்சைப்படுத்தவில்லை. இதனால், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் புரட்சியைத் தடுத்துவிடவும் இல்லை.

ஆனால், ஒரு சந்தேகம் நெடு நாட்கள் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறது. நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்... நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்... என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புகிறது?

- வன்னிஅரசு, செய்தித்தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

22 November 2012

ராமதாசுக்கு காலத்தை வென்று நிற்கும் பட்டம் மரம்வெட்டியா? குச்சிக்கொளுத்தியா?

பல்வேறு சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. காவிரி நடுவர் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்திற்குக் காவிரி நீரைத் தர மறுக்கிறது கர்நாடக அரசு. தண்ணீர் தர மாட்டோம் என்று கன்னட தேசமே எழுந்து வேலைநிறுத்தம் நடத்துகிறது. ஆனால் தண்ணீர் விடக் கோரி கர்நாடகத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தின் ஒற்றுமையைக் காட்ட முடியவில்லை.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழக்கம்போல் கடிதம்தான் எழுத முடிகிறது. கேரள அரசோ அம்மாநில உரிமைகளுக்காக உறுதியாக நிற்கிறது. தமிழகம் எதிர்வினையாற்றக்கூட முடியவில்லை.
ramadoss_403'இருட்டறையில் உள்ளதடா தமிழகம்' என்கிற வகையில் தினமும் 10 மணி நேரம், 15 மணி நேரம் செயற்கையான மின்வெட்டால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழில்கள் பாதிக்கப்படுவதால் தொடர்ந்து தொழிலாளர்களும், ஆலை உற்பத்தியாளர்களும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தலைமுறை தலைமுறையாய் மக்களை அழித்தொழிக்கும் அணுஉலை கூடாது என்று 500 நாட்களுக்கும் மேலாக தென்தமிழகத்தில் வெகுமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடலுக்குள் இறங்கினால்தான் பிழைப்பு நடத்த முடியும் என்கிற நிலைமையில் உள்ள அம்மக்கள் கடலுக்குள் செல்லாமல் தொடர்ந்து போராட்டக் களத்தில் தம்மை ஈடுபடுத்தி வருத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே அணுஉலை முதலில் கேரளாவுக்கு வந்தபோது ஒட்டுமொத்தக் கேரள மக்களும் கட்சி, சாதி, மத பேதமின்றி போராடி அணுஉலையை விரட்டியடித்தார்கள். ஒட்டுமொத்தத் தமிழர்களையும் காவு வாங்கத் துடிக்கும் அணுஉலைக்கு எதிராக ஒரு பகுதி மக்கள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கும் அவல நிலை இங்கே தொடர்கிறது. தமிழக அரசோ அணுஉலை எதிர்ப்பாளர்களை அடக்குவதிலேயே முனைப்பு காட்டி வருகிறது.
அடுத்தத் தலைமுறையை செழுமைப்படுத்தக்கூடிய கல்வி வியாபாரத் தளமாக மாறிப்போனதால் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாமானிய மக்கள் கல்வி கற்க முடியாத நிலை, கொழுத்த பணக்காரர்கள்தான் மேற்கல்வியைத் தொடர முடியும் என்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஊழலும் கையூட்டும் நீக்கமற தலைவிரித்தாடுகின்றன கல்வித் துறையில்.
விவசாய நிலங்களையெல்லாம் வீட்டு மனைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் நில வணிகர்கள். வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கைகளில் தமிழர் நிலம் சிறைபட்டுக் கிடக்கிறது. மார்வாரிகளும் சேட்டுகளும் தமிழச்சிகளின் நகைகளைச் சூழ்ச்சி செய்து பறிமுதல் செய்வதுடன் வீடுகளையும் பறிமுதல் செய்கிறார்கள். சில்லறை வணிகத்தில்கூட அந்நிய முதலீடு என்கிற பெயரில் பிற மொழிக்காரர்கள் ஆதிக்கம் நடைபெறுகிறது. பெட்டிக் கடைகள்கூட இனி தமிழர்களின் கைகளிலிருந்து பறிக்கப்படலாம். தமிழகத்தில் இருக்கிறோமா அல்லது வடநாட்டில் இருக்கிறோமா என்கிற அளவில் வியாபாரத் தளங்களிலும் பிற மொழிக்காரர்களின் ஆதிக்கம் தமிழகத்தைக் கவலைகொள்ளச் செய்கிறது.
கடலோர மீனவர்கள் தினந்தோறும் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டு வருகிறார்கள். கடல் வளம், சிங்களர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகு தமிழீழ நிலத்தில் தமிழர்கள் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழினம் என்கிற ஓர் இனம் வாழ்ந்ததாகவே தடயம் இருக்கக்கூடாது என்கிற அளவில் அழித்தொழிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழ் நிலத்தில் இவ்வளவு சிக்கல்கள் தமிழர்களை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கின்றன. இனம், மொழி, பண்பாடு திட்டமிட்டே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவை பற்றியெல்லாம் எந்த அக்கறையும் கவலையும் இல்லாமல் காதலைப் பற்றியும், காதல் திருமணத்தைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் மகா புரட்சியாளர் ஒருவர். கற்காலத்தை நோக்கி தமிழகத்தைப் பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் அந்தப் புரட்சியாளரின் பெயர் மருத்துவர் இராமதாசு.
எஸ்.எஸ்.எஸ். (ட்ரிபிள் எஸ்) என்கிற தொண்டு நிறுவனத்தின் மூலம் வன்னிய சமுதாய மக்களுக்கு அறிமுகமாகி, வன்னியர் சங்கத்தை உருவாக்கி, அதையே பாட்டாளி மக்கள் கட்சியாய் முற்போக்கு முலாம் பூசி, மீண்டும் சாதி அரசியலில் தீவிரமாகியிருக்கிறார். கடந்த காலங்களில் முன்னுக்குப் பின்னான அறிக்கைகள் மூலம் அரசியலையே அதிர்ச்சியடைய வைத்த அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைக் கொளுத்தி அதன் மூலம் தங்களை வலிமை மிகுந்த சமூகமாய்த் தமிழ்கூறும் நல்லுலகுக்குக் காட்டிக் கொண்டவர். இதனால் 'குச்சிகொளுத்தி இராமதாசு' என்கிற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கேட்டு போராடுவதாகச் சொல்லி சாலையோர மரங்களை வெட்டிப் போட்டு தங்களது மகத்தான வீரத்தைப் புறநானூற்றுத் தமிழர்களிடம் காட்டியதற்காக 'மரம்வெட்டி இராமதாசு' என்னும் கூடுதல் சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்.
இத்தனை பராக்கிரமங்களையும் செய்து திராவிடக் கட்சிகளின் துணையோடு அரசியல் அதிகாரத்திற்கு வந்தவர் பல்வேறு புரட்சிகரத் திட்டங்களை அறிவித்தார். தனது குடும்பத்திலிருந்து யாரும் பதவிக்கு வரமாட்டார்கள்; தமது கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறு செய்தால் சவுக்கடி கொடுக்கப்படும்; தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என்றெல்லாம் புரட்சிகர வசனங்களைப் பேசினார். இப்போதோ 'புதிய அரசியல்! புதிய நம்பிக்கை!' என்று தமது தவப்புதல்வன் அன்புமணிக்காக, கட்சிக்காக உழைத்தவர்களையெல்லாம் விரட்டிவிட்டு தன்னந்தனியாக நிற்கிறார். "ஜெயலலிதாவோடு கூட்டுச் சேர்வது பெற்ற தாயோடு படுப்பதற்குச் சமம். எனவே அவரோடு கூட்டு சேரமாட்டோம்" என்று அறிவித்த சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து அரசியலில் பெரும் புரட்சியை உருவாக்கினார்.
தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என்று அறிவிப்பில் மட்டும் புரட்சி செய்த மருத்துவர் இராமதாசு, திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று புரட்சி வசனமும் பேசி வருகிறார். வருகிற தேர்தல் இந்தப் புரட்சி வசனத்தை காமெடி வசனமாக்கப் போவது உறுதி.
இந்த நேரத்தில் இன்னொரு புரட்சியை ரத்தக் களறியோடு ஆரம்பித்திருக்கிறார் மருத்துவர். அதாவது சாதி மறுப்புத் திருமணம் கூடாது என்பதுதான் அந்தப் புரட்சி. மீறிச் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு தர்மபுரிதான் சாட்சி என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தான் வாழ்ந்த காலம் முழுவதும் தமிழர் விடுதலைக்காகப் பாடாற்றியவர் அய்யா பெரியார். தமிழர் விடுதலையடைய வேண்டுமென்றால் சாதி மறுப்புத் திருமணங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தி, அந்தத் தள்ளாத வயதிலும் மூத்திரப் பையைத் தூக்கிக் கொண்டு களமாடினார். பெரியார் மட்டுமல்ல புரட்சியாளர் அம்பேத்கர், அய்யா வைகுண்டர் என அனைவரும் சாதி மறுப்புத் திருமணங்களை வலியுறுத்திக் களமாடினார்கள்.
ஆனால் வாராது வந்த மாமணியாய் வாய்க்கப் பெற்றுள்ளதாகக் கருதிக்கொள்ளும் மருத்துவர் இராமதாசு, சாதி மறுப்புத் திருமணங்கள் கூடாது என்கிறார். காரணம் கேட்டால், எல்லாம் நாடகக் காதல் என்கிறார். இரு தனி நபர்களுக்கிடையே எழும் இயற்கையான உணர்ச்சியை அரசியலாக்கும் அருவறுப்பான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் இந்தப் புரட்சியாளர். முதலில் சாதி மறுப்புத் திருமணங்கள் வேண்டாம் என்றவர், இப்போது காதல் திருமணங்களே கூடாது என்கிறார்.
பாலின உணர்ச்சி தொடர்பாக பல்வேறு உரிமைப் பிரச்சனை உலகளாவிய அளவில் எழுந்துள்ளது. திருநங்கைகள் மட்டுமல்ல ஓரினச் சேர்க்கையாளர்கூட தங்களது உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். இச்சிக்கல்கள் குறித்து சமூக அக்கறை உள்ளவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருத்துவரோ எவ்வளவு பிற்போக்குத்தனமாகவும் பிழைப்புவாதியாகவும் செயல்படுகிறார் பாருங்கள்.
இனிமேல் காதலை மையப்படுத்தித் திரைப்படங்களே எடுக்கக்கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது. தெருவில் இனி ஆணும் பெண்ணும் சேர்ந்து நடக்கக் கூடாது; பூங்காக்களில் கடற்கரைகளில் ஜோடி ஜோடியாக உட்காரக் கூடாது; மீறினால் தருமபுரி போல் நடக்கும் என்று இனி எச்சரிக்கை விடுத்தாலும் விடுவார் போலிருக்கிறது. அப்படியான ஒரு பாசிசத்தை தமிழக அரசியலில் திணித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்தவர்களுடைய படுக்கையறையை எட்டிப் பார்க்கும் அருவறுப்பான அரசியலுக்குள் தள்ளப்பட்டதன் பின்னணி என்ன?
anbumani_ramadoss_500
தொடர்ச்சியாக ஏற்பட்ட தேர்தல் தோல்வியும், இவரால் புறக்கணிக்கப்பட்ட வன்னியர் சமூகம் இவரைப் புறக்கணித்ததும்தான் காரணம். பாமகவில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த திரு.வேல்முருகன் அவர்கள் நீக்கப்பட்ட பிறகு பாமகவின் பெரும்பகுதி அவர் பக்கம் இணைந்தது. இதனால் பதற்றமடைந்த மருத்துவருக்குக் கிடைத்த அரிய மருந்துதான் இந்தக் காதல் விவகாரம்.
"கீழ் சாதிக்காரங்க நம்ம பொண்ண தூக்கிட்டு ஓடுறான். சும்மா இருக்கீங்களே...." என்று சாதி உணர்வைத் தூண்டுகிற பிரச்சாரத்தால் மீண்டும் வன்னிய சமூகத்தினருக்கு சாதிவெறியூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இது மட்டுமல்லாது, தலித் அல்லாத பிற சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து, தலித்துகளுக்கும் தலித் அல்லாதவருக்கும் இடையே பகையை உருவாக்க முயலுவதுதான் மருத்துவரின் புதிய அரசியல். ஆகவேதான் சாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவித்து மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது இந்த வேதாளம். அதற்குக் கிடைத்த வாய்ப்புதான் தருமபுரி நத்தம் சேரி. இப்போது அவர் நினைத்ததுபோல் செய்து முடித்துவிட்டார். எதிர்வினையாற்ற வேண்டியவர்கள் தலித்துகள்தான். அதிலும் குறிப்பாக, 'அடங்க மறு! அத்து மீறு! திமிரி எழு! திருப்பி அடி!' என்கிற முழக்கங்களை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள்தான் எதிர்வினையாற்ற வேண்டியவர்கள். ஆனால் சிறுத்தைகளோ அமைதி காக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை தலித் இயக்கங்கள் எழுப்புகின்றன.
"பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும், இன்ன பிற சனநாயகச் சக்திகளும் இத்தகைய இக்கட்டான நிலைமையில் ஆற்றவிருக்கும் எதிர்வினைகளுக்காக - செயற்பாடுகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் காத்திருப்பதையே தற்போதையக் கடமையாகக் கருதுகிறது.
சமூக நல்லிணக்கத்தின் மீதும் சனநாயகத்தின் மீதும் நம்பிக்கையுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கவும், தமிழகத்தை முற்போக்கான திசைநோக்கி இட்டுச் செல்லவும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் முன்வந்தால், அதற்கு உண்மையாக ஒத்துழைக்க விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் கைகளை நீட்டியபடியே காத்திருக்கிறது."
என்ற தனது அறிக்கை மூலம் தமிழ்ச் சமூக ஒற்றுமைக்காகத் தான் எப்போதும் தயாராக இருப்பதை உணர்த்தியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
முதிர்ச்சியாக நடந்துகொள்ள வேண்டிய வயது பெரியவர் இராமதாசுக்கு இருக்கிறது. தொல்.திருமாவளவன் அவர்களுக்கோ 50 வயதுதான் ஆகிறது. இளைஞர்களை வழிநடத்தும் துடிப்புமிக்க இளைஞர். ஆனால் இந்த வயதில் மிகவும் முதிர்ச்சியாகவும் பொறுப்புணர்வோடும் நடந்துகொள்வதோடு, தமிழகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் சமூகப் பொறுப்பும் அக்கறையும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள்ளது என்பதைத்தான் திருமாவளவன் அவர்கள் தமது அறிக்கையின் மூலம் உணர்த்துகிறார். "கலவரத்தை உருவாக்க ஒரு ரவுடி போதும். கலவரத்தைக் கட்டுப்படுத்த நல்ல தலைவன் தேவை." கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறார் தொல்.திருமாவளவன் அவர்கள். கலவரத்தை உருவாக்கிய ரவுடிகளை தமிழ்ச் சமூகம் அறியும்.
இச்சூழலில் தமிழர் ஒற்றுமை குறித்து அக்கறைப்படுபவர்கள், 'நாம் தமிழர்' என்று உரத்துக் குரல் கொடுப்பவர்கள், பிரபாகரன் வழியில் நடப்போம் என்று சொல்பவர்கள் வாய்மூடிக் கிடப்பதன் பின்னணி என்ன?
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அய்யா நெடுமாறன் அவர்கள், மருத்துவர் இராமதாசோடு சேர்ந்து தலித்துகளுக்கும் எங்காவது நினைவு முற்றம் அமைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறாரோ?
'நாம் தமிழர்' என்று முழங்கும் சீமான்கள் மாவீரர் மாதமான நவம்பர் மாதம் என்றாலும் அமைதிப்படை படப்பிடிப்பில் கவனம் செலுத்தத்தான் முடிகிறது. இவர்களால் வேறென்ன கிழிக்க‌ முடியும்?
தருமபுரி நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவிக்காதவர்கள், சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் மருத்துவர் இராமதாசுக்குக் கண்டனம் தெரிவிக்காதவர்கள் மருத்துவரின் கருத்தை ஆதரிப்பதாகத்தானே அர்த்தம். நடுநிலை என்பது ஏமாற்று வேலைதானே. பாதிக்கப்பட்டவன் பக்கம் நிற்பதே அறம். இந்த அறம் நெடுமாறன் அவர்களுக்கு உண்டா? தமிழ்த் தேசியவாதிகளுக்கு உண்டா? அல்லது தலித்துகள் தமிழர்கள் இல்லை என்று எண்ணி இவர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்களா?
மருத்துவரை பல பட்டங்களைச் சொல்லி தமிழகத்தில் அழைக்கிறார்கள். தமிழினக் காவலர் என்றழைக்கிறார்கள். தமிழ்க்குடிதாங்கி பட்டமும், அம்பேத்கர் சுடர் பட்டமும் வழங்கி சிறுத்தைகள் அவருக்குச் சிறப்புச் செய்தார்கள். ஆனால் இப்பட்டங்களெல்லாம் இப்போது பொருத்தமில்லாமலே போய்விட்டன. காலத்தை வென்று நிற்கின்ற பட்டங்கள் 'மரம் வெட்டி இராமதாசு', 'குச்சிக்கொளுத்தி இராமதாசு' என்பவைதான். இதைவிடத் தீர்க்கதரிசனமான பட்டங்களை, புரட்சிகரமான பட்டங்களை யார் சுமக்க முடியும்?
மரம் வெட்டிக்கு நிகர் மரம் வெட்டிதான். குச்சிக்கொளுத்திக்கு நிகர் குச்சிக்கொளுத்திதான் என்பதை மருத்துவர் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.
- வன்னி அரசு, மாநிலச் செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

நன்றி : கீற்று இணையதளம் 

18 November 2012

பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்

அந்த அண்ணா நகர் காலனிப் பகுதியில் காடுகளுக்கு வேலைக்குப் போனவர்கள் அப்போதுதான் திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு உணவுக்காகச் சிலர் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். வயதானவர்கள் வருகிற தீபாவளிக்கு என்ன செய்யலாம் என்று வீடுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அண்ணாநகர் நுழைவாயிலில் உள்ள ஜோசப் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. வீடு திடுமெனத் தீப்பிடித்து எரிகிறது. ஆடு, மாடுகள் சிதறி ஓடுகின்றன. பெண்டு பிள்ளைகளின் கதறல் அந்தப் பகுதியையே நிலைகுலைய வைக்கிறது. "ஒரு பய இருக்கக் கூடாது. ஓடுங்கடி..." என்கிற மிரட்டல் சத்தம் ஒவ்வொரு வீட்டையும் தாக்கும்போது ஓங்காரமாய் ஒலிக்கிறது.

அந்தத் தெருவின் கடைசி வீடு நிறைமாத கர்ப்பிணியாகவுள்ள புவனாவின் வீடு. அப்பா திருப்பூரில் வேலைபார்த்து வருகிறார். அம்மாவோ பக்கத்தில் உள்ள கடலைக் காட்டில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார். தாக்குதலிலிருந்து தப்பிக்க சோளக் கொல்லைக்குள் ஒளிந்து கொள்கிறார் புவனா. அவரது வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், தவணை முறையில் வாங்கி வைத்திருந்த புதிய டிவிடி பிளேயர், டிவியை உடைத்துப் போட்டுவிட்டு பாத்திரங்களையும் சிதைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
புவனா 7 மணி வரை காட்டுக்குள் தனியாக நடந்தே போகிறார். அருகில் உள்ள கிராமத்தில் அடைக்கலம் கேட்கிறார். அவர்களோ, "அடைக்கலம் கொடுத்தா எங்களையும் அடிப்பாங்க... போ போ" என்று விரட்டுகின்றனர். வேறு வழியில்லாமல் அந்த நிறைமாத கர்ப்பிணி 10 கிலோ மீட்டர் தூரம் தனியாக நடந்தே சென்று பேருந்துகள் செல்லும் சாலையை அடைகிறார். போகிற வாகனங்களை வழிமறித்து 'லிப்ட்' கேட்டும்கூட அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை.
ஒரு வழியாக இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் அண்ணா நகர் சேரிக்குள் புவனா நுழையும்போது அப்பகுதியே ஒப்பாரியும் ஓலமுமாய் இருந்தது. 60 வீடுகளும் தாக்கப்பட்டிருந்தன. தாக்குதல் என்றால் சாதாரணத் தாக்குதல் இல்லை. பெட்ரோல் குண்டுகளால் சின்னாபின்னமாக்கியிருந்தனர். வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், அரசு கொடுத்த இலவச மிதிவண்டிகள், பீரோக்கள், கட்டில்கள் என்று வீடுகளிலிருந்த அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டன. துணிமணிகள் எரிந்துகொண்டிருந்தன. மாற்றுத் துணியில்லை. அண்ணாநகர் பகுதி மட்டுமல்ல கொண்டம்பட்டி சேரியும் இப்படித்தான் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. கொண்டம்பட்டி பழைய காலனியும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை.
வன்முறைக் கும்பலின் தாக்குதலில் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனிதான் மிகப் பெரிய தாக்குதலுக்குள்ளான பகுதி. இந்தக் காலனிக்குள் நுழையும்போதே எரிந்த வீடுகளின் சாம்பல் நெடிதான் வரவேற்றது. விவசாயிகளின் பழமைவாய்ந்த மாட்டு வண்டி ஒன்று தொழுவத்தோடு எரிக்கப்பட்டிருந்தது. இன்னமும் அந்த மாட்டு வண்டி நெருப்பில் தகித்துக் கொண்டுதான் இருந்தது. பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே இருந்த பட்டுப் புடவைகள், நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. சமையல் அறையிலிருந்த கேஸ் சிலிண்டரைத் திறந்துவிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடுகின்றனர். மிக நிதானமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்தபின் பெட்ரோல் குண்டுகளை வீசி வீடுகளைச் சேதப்படுத்திவிட்டு ஓடுகின்றனர். வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் எலும்புக் கூடுகளைப் போல நின்று கொண்டிருந்தன. வீடுகளின் கட்டிடங்கள் மேற்கூரை மட்டுமல்ல சுவர்கள்கூட தரைமட்டமாயிருந்தன. மாற்றுத் துணிக்குக்கூட வழியில்லாமல் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. வெந்து தணிந்தது அந்தச் சேரி. வன்முறைக் கும்பல் மிகப் பொறுமையாக வந்த வேலையை முடித்துவிட்டுப் பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்தனர்.
இது ஏதோ ஈழத்தமிழர்கள் குடியிருக்கும் பகுதியில் சிங்களவர்கள் நடத்திய தாக்குதல் அல்ல. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்களான பறையர்கள் மீது இன்னொரு தமிழர்களான வன்னியர்கள் நடத்திய தாக்குதல்தான்.
இத்தனை வன்முறை வெறியாட்டத்திற்கான காரணமாகச் சொல்லப்படுவது ஒரு காதல் திருமணத்தைத்தான்.
dharmapuri_naththam_village_370தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி. நல்ல விவசாய பூமிதான். சோளமும் கம்பும் பருத்தியும் விளைகிற பூமி. இந்த நத்தம் காலனியில் உள்ள பறையர்களுக்குச் சொந்தமாக விவசாய நிலம் இல்லையென்றாலும் திருப்பூர், பெங்களூர், கோவை பகுதிகளுக்குச் சென்று வேலை பார்த்து வருவதால் அங்குள்ள வன்னியர்களை நம்பி வாழ்வதில்லை. அதுமட்டுமல்ல கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நத்தம் காலனியைச் சுற்றியுள்ள சேரிகளுக்கெல்லாம் நத்தம் காலனிதான் பாதுகாப்பு. அதற்குக் காரணம் நக்சலைட்டுகள். இங்குதான் அப்பு, பாலன் போன்ற நக்சலைட்டுகள் தங்கி பணிசெய்தனர். அரச பயங்கரவாதத்திற்கெதிராகப் புரட்சி செய்யக் கிளம்பியவர்களுக்கு அடைக்கலம் தந்தது இந்த நத்தம் காலனிதான். அதனால்தான் அப்பு, பாலன் ஆகியோருக்கு ஊரின் நுழைவாயிலில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழக உளவுத்துறையின் தீவிரக் கண்காணிப்புக்குள்ளான சேரி மட்டுமல்ல 'பொடா' கைதிகள் அதிகம் உள்ள சேரியும், அரசியல் வழக்குகள் அதிகம் உள்ள சேரியும் நத்தம் காலனிதான்.
அப்படிப்பட்ட காலனியைச் சார்ந்தவர் இளங்கோ. தருமபுரி அரசு மருத்துவமனையில் சமையல்காரராக வேலைபார்த்து வருகிறார். பாலாஜி, இளவசரன் என்கிற இரு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். பக்கத்து ஊரான செல்லன்கொட்டாயைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தமது மகள் திவ்யா, மகன் மணிசேகரனுடன் வசித்து வந்தார்.
திவ்யா வெளியூரில் இளநிலை செவிலியர் பட்டப் படிப்பு படித்து வந்தார். இளவரசன் வெளியூரில் பிஎஸ்சி படித்து வந்தார். பேருந்துகளில் போகும்போதும் வரும்போதும் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாகி, கடந்த அக்டோபர் 14 அன்று வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். மறுநாள் அக்டோபர் 15ஆம் தேதி சேலம் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்குமாரிடம் தஞ்சமடைந்து பாதுகாப்புக் கேட்கின்றனர்.
அது வரை பதுங்கியிருந்த சாதிவெறி அப்போதுதான் தலையைத் தூக்கியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் மதியழகன். அக்கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். வெள்ளாய்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜா, ஆண்டியல்லி பஞ்சாயத்துத் தலைவர் சின்னச்சாமி, பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணசாமி மற்றும் பாமகவைச் சேர்ந்த பச்சையப்பன், மெடிக்கல் சிவா உள்ளிட்டோர் ஊர்க்கூட்டம் போடுகின்றனர். இக்கூட்டத்தில் புளியம்பட்டி, கோனயம்பட்டி, சவுலுப்பட்டி, செல்லங்கொட்டாய், வாணியம்படியான் கொட்டாய், புதூர், ரக்கிரியான் கொட்டாய், கதிர் நாயக்கன் நல்லி, குப்பூர், செங்கல்மேடு, சவுக்குத்தோப்பு, மத்தன் கொட்டாய், மூலக்காடு, கொல்லப்பட்டி, கொட்டாவூர், குட்டூர், கீழாண்டி அல்லி, மேலாண்டி அல்லி, வன்னியம்பட்டி, சீராம்பட்டி, லலிதாவூர், லாலாக்கொட்டாய், ஒட்டையான்கொட்டாய், காமராஜ் நகர், தாளிக்காரன் கொட்டாய், நாயக்கன்கொட்டாய், சவுலுக்கொட்டாய், வெள்ளாள்பட்டி உள்ளிட்ட 36 ஊர்களைச் சேர்ந்த வன்னியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சரவணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் இந்த ஒருங்கிணைப்பில் பின்னணியாகச் செயல்பட்டனர்.
ஊர்க்கூட்ட்டத்தின் முடிவில் தமது சாதிப் பெண்ணான திவ்யா வன்னியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் போடுகின்றனர். இதனடிப்படையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நத்தம் காலனியைச் சார்ந்தவர்களை வரவழைத்து பஞ்சாயத்து நடத்துகின்றனர் வன்னியர்கள். பஞ்சாயத்தில், "வருகின்ற 7ஆம் தேதிக்குள் திவ்யாவை ஒப்படைக்காவிட்டால் பறப் பசங்க யாரும் உயிரோடவே இருக்க முடியாது" என்று பகிரங்கமாக மிரட்டப்படுகின்றனர்.
இந்நிலையில் திவ்யாவின் தந்தை நாகராஜ் நவம்பர் 7ஆம் தேதி மாலை 3 மணியளவில் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, மாலை 4 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர் வன்னியர்கள். பா.ம.க. பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் இந்தச் சாலை மறியல் நடைபெறுகிறது. 4.30 மணிக்கெல்லாம் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி, கொண்டம்பட்டி பழைய காலனி ஆகிய பகுதிகளில் நுழைந்து தீக்கிரையாக்குகின்றனர்.
தருமபுரியிலிருந்து பிரதான சாலையான செங்கல்மேட்டிலிருந்த மரங்களை அறுத்துப் போடுகின்றனர்.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக வன்னிய சாதிவெறிக்கும்பல் அவசரமில்லாமல் பதற்றமில்லாமல் காவல்துறை வந்துவிடுவார்களோ என்ற பயமில்லாமல் பொறுமையாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை பல சேரிகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன, தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சங்கராபுரம், குண்டுபட்டி, மருக்காளம்பட்டி, கொடியன்குளம், மீனாட்சிபுரம், அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்து நகர்... இப்படிப்பட்ட சேரிகளை சாதிவெறியர்கள் தாக்கிவிட்டு, வீடுகளுக்குத் தீ வைத்துவிட்டு ஓடியுள்ளனர். ஆனால் நத்தம் காலனி தாக்குதல் என்பது தமிழகத்திலேயே இதுவரை நடந்திராத கொடூரமான தாக்குதலாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னிய சாதிவெறியர்கள் சேரிக்குள் நுழைகிறார்கள். இதில் பெண்கள் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். முதலில் வீட்டுக்குள் உள்ள பீரோக்களை உடைப்பது அதில் உள்ள பணம், நகைகள், பட்டுப்புடவைகளைக் கொள்ளையடிப்பது. அதற்குப் பிறகுதான் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். வீட்டின் முற்றத்தில் உள்ள கார்கள், பைக்குகளைத் தீக்கிரையாக்கிவிட்டு விலை உயர்ந்த டி.வி., பிரிட்ஜ், லேப்-டாப், டிவிடி பிளேயர் போன்றவற்றையும் கொள்ளையடித்துள்ளனர். ஒரு சில வீடுகளில் இவைகளை உடைத்தும் போட்டுள்ளனர். அதாவது தூக்கிச் செலல முடிந்தவற்றைத் தூக்கிச் சென்றுள்ளனர். முடியாதவற்றை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதன் உச்சகட்டமாக நத்தம் காலனிக்காரர்கள் வணங்கும் கொடகாரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.













ஒவ்வொரு வீட்டைத் தாக்கும்போதும் "பறத் தேவடியா மகனுகளுக்கு வந்த வாழ்வப் பாருடா. வசதியப் பாருடா. இவனுங்களுக்கு இதெல்லாம் ஒரு கேடா..." என்று சொல்லிக்கொண்டே தாக்கியுள்ளளர்.
பறையர் வகுப்பைச் சேர்ந்த இளவரசன், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யா போன்ற காதல் திருமணங்கள் இப்பகுதியில் முதல் முறையன்று. அப்பகுதியில் இதுபோன்ற சாதி கடந்த காதல் திருமணங்கள் நிறைய நடந்துள்ளன. ஆனால் இத்தகைய கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னணி இந்தக் காதல் திருமணம் மட்டுமல்ல.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரச பயங்கரவாதத்திற்கெதிராக எழுந்த நக்சல்களின் பாதுகாப்பு அரண் நாயக்கன் கொட்டாய் காலனிதான். பறையர்கள் மட்டுமல்லாமல் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இக்கிராமத்திற்கு வந்து செல்வார்கள். இந்த நத்தம் காலனிக்காரர்களே பல திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளனர். அது மட்டுமல்ல சுற்றியுள்ள தலித்துகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எந்தப் பிரச்சனை என்றாலும் நத்தம் காலனி மக்கள்தான் களத்தில் நிற்பார்கள். அந்த வகையில் உழைக்கும் மக்களுக்கான பாதுகாப்பு அரண் நத்தம் காலனிதான். ஆதிக்கச் சாதி வன்னியர்களைச் சார்ந்து வாழாமல் தனித்து சுயமாய் உழைத்து வாழ்ந்து வந்த நாயக்கன்கொட்டாய் பகுதி சேரி மக்கள் மீது வன்னியர்கள் மட்டுமல்ல, அப்பகுதி காவல்துறையும் வெறுப்புணர்வைக் கக்கியது. நாள் பார்த்தது. அந்த நாள்தான் நவம்பர் 7ஆம் நாள். நெடு நாட்கள் பசியை - வெறியை - உளவுத்துறையின் உதவியுடன் வன்னிய சாதி வெறியர்கள் தணித்துக் கொண்டனர்.
thirumavalavan_dharmapuri_641
உளவுத் துறைக்குத் தெரியாமல் ஒரு சேரி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட முடியாது. மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்தைத் தடுத்துள்ளனர். பெட்ரோல் குண்டுகளை உருவாக்க பெட்ரோல் வாங்கியுள்ளனர். 36 கிராமங்களில் உள்ள வன்னியர்களை ஊர் ஊராய் போய்த் திரட்டியுள்ளனர். நக்சல்கள் பயிற்சியில் ஈடுபட்ட நாயக்கன் கொட்டாய் உளவுத்துறையின் முழு கண்காணிப்புக்குள்ளான பகுதி என்பதால் உளவுத்துறை போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


உளவுத் துறையின் நோக்கம் மீண்டும் நக்சல்கள் இங்கு வந்து போவதைத் தடுப்பது. சாதிவெறியர்களின் நோக்கம் பொருளியல்ரீதியாக சேரி மக்கள் தலைநிமிர்ந்து நிற்பதைச் சிதைப்பது. ஒரே காதல் பிரச்சனையில் இரண்டு பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டனர் உளவுத்துறையினர். உயிர்ச் சேதமில்லாமல் கொள்ளையடித்து வீடுகளை சின்னாபின்னப்படுத்தியதன் மூலம் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பின்னால் நகர்த்தியிருக்கிறது இத்தாக்குதல். ஒவ்வொரு வீட்டிலும் 5 பவுன், 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ரூ. 5000 முதல் 5 லட்சம் வரை திருடப்பட்டிருக்கின்றன. இதுவரை 120க்கும் மேற்பட்ட வன்னியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரிடமும் இன்னமும் நகைகளையோ பணத்தையோ கைப்பற்றியதாகத் தகவல் இல்லை. தங்குவதற்கு வீடு இல்லை. மாற்றிக்கொள்ள உடையில்லை. வாசலில் அகதிகளைப்போல கண்ணீரும் கம்பலையுமாய் உடகார்ந்திருக்கிறார்கள். முந்தைய தலைமுறைக்குப் பின்னால் பொருளாதாரரீதியாக எழுந்த இந்த தலைமுறை அடுத்த தலைமுறையில்தான் எழுந்து நிற்கும் என்கிற அளவில் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் பெருவிழாவில் பேசிய காடுவெட்டி குரு, "கலப்புத் திருமணங்கள் செய்பவர்களை உயிரோடு விடக்கூடாது" என்று பகிரங்கமாகப் பேசியதை மருத்துவர் ராமதாஸ் அவர்களும் ரசித்தார்.

சாதிவெறியோடு தமது சமுதாயத்தைத் திருடர்களாக, கொள்ளையர்களாக மாற்றிய மகத்தான சாதனையைச் செய்துவரும் மருத்துவர் ராமதாஸ் இனிமேல் தமிழ்ச் சமூகம் என்றோ தமிழ்த் தேசியம் என்றோ பேச அருகதை உண்டா? நடந்த சம்பவத்திற்கு பா.ம.க. பொறுப்பேற்று வெளிப்படையாக மன்னிப்புக் கேட்குமா?
பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில் கலந்துகொண்டு முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளனர்.
சேரி மக்களின் விடுதலைக்கு ஆயுதம்தாங்கிய புரட்சிதான் ஒரே வழி என்று முழக்கமிட்ட புரட்சிகரக் குழுக்களுக்குப் பதுங்குமிடமே சேரிகள்தான். இன்றைக்கு 'புரட்சி' செய்யப் புறப்பட்ட அந்த நக்சல்பாரிகள், அப்பாதையிலிருந்து விலகி தாங்கள் சார்ந்த சாதி அரசியல் கட்சிகளிலும், கட்டப்பஞ்சாயத்துகளுக்காக தனியே இயக்கங்களும் நடத்தி பிழைக்கப் போய்விட்டார்கள். பாவம் சேரிமக்கள். புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்தத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். 'புரட்சிக்காரர்களோ' பாதுகாப்பாகவும் வசதியாகவும் சாதி அரசியலில் வலம் வருகின்றனர். அரச பயங்கரவாதத்தை ஒழிக்க வந்தவர்கள் சாதி பயங்கரவாதிகளாக இன்று மாறிப்போனார்கள்.

இன்று நாயக்கன்கொட்டாய் முகப்பில் தோழர்கள் அப்புவும் பாலாவும் மட்டுமே உடைபடாமல் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குச் சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர்.

தமிழ்த்தேசியம் பேசுகின்ற எந்தத் தமிழ்த் தேசியவாதிக்கும் சேரி மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட மனமில்லை. வெளிப்படையாக வன்னியர்களைத் தூண்டிவிடும் காடுவெட்டி குருவையும், அந்த குருவைத் தூண்டிவிடும் ராமதாசையும் கண்டிக்க எந்தத் தமிழ்த் தேசியவாதிக்கும் துணிச்சல் இல்லை என்பதைத்தான் இந்தத் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.
புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும் பாமகவின் சாதிவெறியுமே நத்தம் காலனியைச் சிதைத்துள்ளது. 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர். 36க்கும் மேற்பட்ட ஊரார் சேர்ந்து நத்தம் காலனி மீது தாக்குதல் நடத்தி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் கொதிப்பும் தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை.
சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் - அன்று
வரலாறு மாறும் அப்போது, ஒப்பாரியும் ஓலமும் சேரிக்கு மட்டுமே சொந்தமாக இருக்காது.
- வன்னி அரசு, மாநிலச் செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

28 August 2012

நெருப்பைத் தின்று வெளிச்சமானவளே கரும்புலி செங்கொடி முதலாமாண்டு நினைவாக வன்னிஅரசு

தமிழ்க்குடி தழைக்க
தன்னையே தீய்த்த
எங்கள் குலக்கொடி
ஈடில்லா செங்கொடியே

இந்தியக் கொடி
தூக்குக்கொடியாய்
தமிழர் மூவர்
உயிர்குடிக்க
துடிதுடிக்க
தமிழர் நெஞ்சமெல்லாம்
பதைபதைக்க
நீ மட்டும்
தமிழர் நிலமெல்லாம்
விதைவிதைக்க
விடுதலை
வித்தானாய்

தீயிலும் வேகாத
ஒளியானாய் - கரும்
புலியானாய்

இலை மலர
ஈழம் மலருமென்று
ஆரூடம் சொன்னவர்கள்
அவாள்களின் முந்தானையில்
முகக்கரி துடைப்பதைக்
காணவொண்ணாமல்
கரிக்கட்டையாய் ஆனாயோ

புலி புலியென்று
நெடுமரமாய் நின்று
தமிழ்த்தேசியத்தின்
கெடுமரமாய்
போயசைத்
தாங்கிப் பிடிப்பதைப்
பொறுக்காமல்
உன்னை
நெருப்புக்குள்
கருக்கிக் கொண்டாயோ

செங்கோலிருந்தும்
தில்லி விருந்துக்காக
ஏமாற்று நாடகங்கள்
அரங்கேற்றிய
நயவஞ்சகத்தைக்
காணச் சகிக்காமல்
வெந்தணலுக்கு உன்னை
தின்னத் தந்தாயோ

வெந்ததைத் தின்று
விதிவந்தால் சாகும்
தமிழ்ச் சாதிக்கு
உயரூட்ட
நெருப்பைத் தின்று
வெளிச்சமானவளே

உன் வெளிச்சத்தில்
தில்லி இருட்டைப் பொசுக்கி
சிறுத்தைகள் நாங்கள்
தமிழர் விடுதலையை
வென்றெடுப்போம்!

31 July 2012

நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம்: 'அய்யோ இப்பவே கண்ணைக் கட்டுதே!' -வன்னிஅரசு

"அரசே என்ன இது? உங்கள் உடல் மூடப்பட்டு முகம் மட்டும் தெரிகிறது. அந்த மல்யுத்த வீரனுடைய முகம் மூடப்பட்டு உடல் மூடப்படாமல் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லையே"
"அட மங்குனி அமைச்சரே! உன் மூளைக்கு இதெல்லாம் புரியாது. இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குப் பின் வரும் தலைமுறைக்குத் தெரியவா போகிறது? இப்படி நோஞ்சானாக ஒரு மன்னன் இருந்தான் என்பதைவிட பராக்கிரமசாலியாக, மாபெரும் வீரனாக இருந்தான் என்று வரலாறு சொல்ல வேண்டும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!"
இம்சை அரசன் திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி போல இருக்கிறது 'நாம் தமிழர்' சீமானின் பேச்சும் போக்கும்.
seeman_2992009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பிறகு தொடங்கிய ஓர் அரசியல் கட்சிதான் 'நாம் தமிழர்'. திரைப்படங்களில் ஒரே பாடலில் பண்ணையாருக்கு எதிராக மக்களைத் திரட்டும் கதாநாயகன் போல செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பியிருக்கிறார்.

தமிழீழத்தை மீட்பதற்காக விடுதலைப் புலிகள் நடத்திய மாபெரும் போர் தற்போதைக்கு முடிவுற்ற சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியையும் (பிற்பாடுதான் கொடியில் சிறிது மாற்றம் செய்தனர்) தமிழர் பெருந்தலைவர் சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்த 'நாம் தமிழர்' இயக்கப் பெயரையும் 'எடுத்து'க்கொண்டு தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பி இருக்கிறார் அண்ணன் சீமான் அவர்கள் (சொந்த புத்தி எதுவுமில்லை என்கிற விவாதத்திற்கெல்லாம் போக வேண்டாம்).

22 July 2012

சமூகப் புரட்சி செய்த போராளித் தந்தையின் நினைவு நாள் வன்னிஅரசு


சூலை 14ஆம் நாளே அங்கனூருக்குப் புறப்பட்டாச்சு...


கடலூர் மாவட்டத்திற்குள் நுழைகிற இடத்திலிருந்து அங்கனூர் வரை ஒரே சுவரொட்டிகள்மயம்தான்... 'சூலை 15ஆம் நாள் அய்யா தொல்காப்பியன் நினைவு நாள்... போராளித் தலைவரை எமக்களித்த போராளித் தந்தைக்கு வீரவணக்கம்!' என்ற வாசகங்களை சுவரொட்டிகள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன. வெற்றிலைக் கறை பற்களுடன் அய்யா தொல்காப்பியன் அவர்களின் சிரிப்பு செம்மண் வரப்புப்போல் இருந்தது. சிரிக்கிறாரா நகைக்கிறாரா என்று தெரியாத அளவுக்கான சிரிப்புடன் சுவரொட்டி எம்மை வரவேற்றது.

நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை - வன்னிஅரசு

நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை
- வன்னிஅரசு

நெருப்பைக் கடப்பது எளிது
பொறுப்பாய் நடப்பது கடிது
புயலைக் கொண்டுவருவது எளிது
மக்களை அமைப்பாக்குவது கடிது
எது கடிதோ, எது முடியாதோ
அதை நிகழ்த்துதல்தான் புரட்சி

பொதுக் கிணற்றில்
புது பக்கெட் வாங்கிக்கூட
தண்ணீர் எடுக்க முடியாது
பொதுத் தெருவில்
புதுச் செருப்புடன்கூட
நடமாட முடியாது
சைக்கிளில் செல்ல முடியாது
நல்ல பெயர் வைக்க முடியாது
நல்ல சோறு சாப்பிட முடியாது
கை நிறைய காசு இருந்தும்
கொட்டாங்குச்சியில்தான் தேநீர்
அது ஒரு காலம்
அது நீலத் துண்டுகளின் காலம்
அது மனுக்கொடுக்கும் காலம்
அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது

அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
திருப்பி அடி
இந்த முழக்கமே பொதுப் பாதையைத் திறந்து விட்டது
பொதுக் கிணற்றை உடைத்து
சேரிப்பக்கம் மடை மாற்றியது
தேநீர்க் கடைகளெல்லாம் அதிர்ந்தன
தனிக் குவளைகள் உடைந்தன

இந்த அதிசயத்தை நிகழ்த்தியது யார்?
இந்தப் புரட்சியை நடத்திக் காட்டியது யார்?

பொன்விழாக் காணும் போராளித் தலைவரை
காலம் முன்மொழிகிறது
அர்ப்பணிப்பு வழிமொழிகிறது

நெல்லை விதைத்தால்
நெல்லைத்தான் தரும் வயல்
வானம் பார்த்த பூமியானாலும்
கம்மங் கதிர்களும் வரகு கதிர்களும்
காத்துக்கிடக்கின்றன விவசாயிகள் வருகைக்காய்
முளைப்பாரித் திருவிழாவும்
பெரிசுகளின் கும்மியாட்டமும்
வயலுக்கும் வீட்டுக்குமாய்
தானியங்கள் குவிந்து கிடக்கும்.

அந்த விவசாயிக்குத் தெரியும்
நிலம் என்னுடையது
பயிர் என்னுடையது
உழைப்பு என்னுடையது
இலாபமும் என்னுடையது

அந்த விவசாயிக்குத் தெரியும்
நமக்கு நாமே திட்டத்தின்கீழ்தான்
வெள்ளாமையைப் பெருக்க முடியும் என்று

இப்போது சொல்லுங்கள்
இந்த அமைப்பு என்னுடையது
இந்த கோட்பாடுகள் என்னுடையவை
இந்த அமைப்பின் அனைத்தும்
எனக்கே எனக்கு

நாமே கொட்டுவோம் தங்கக் காசுகளை
நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை
தொடர்வோம் தகதக தங்க வேட்டையை

ஜக்கம்மா இது உனக்கே ஞாயமா?

"கீழ்ச் சாதிக்காரங்க சமைக்கிற சோத்தச் சாப்பிட்டா சாமிக் குத்தம் ஆயிடும். எங்க ஜக்கம்மாவுக்குக் கோவம் வந்து எங்களல்லாம் அழிச்சிடும்... அதனாலதான் இந்தச் சாப்பாட்டை எங்க பிள்ளைங்கள விடல"
- இப்படி ஒரு நவீன சாதிய வன்கொடுமை ஜக்கம்மாவின் பேரால் நடந்துகொண்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையிலிருக்கிறது கொத்தமங்கலம் கம்மப்பட்டி. கே.கம்மப்பட்டி என்று அழைக்கப்படும் அந்த ஊரில் இராஜகம்மளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கும் மேற்பட்ட மக்கள் நிலைகொண்டுள்ளனர். வானம் பார்த்த பூமியான அந்தக் கரிசல் பூமியில் விவசாயம்தான் அப்பகுதி மக்களுக்குத் தொழிலாய் இருந்தது. ஆனால் அப்பகுதியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலில்தான் நல்ல வருமானம். இருந்தாலும் இந்த ராஜகம்மளத்து நாயக்கர்களுக்கோ வீடு வீடாய்ச் சென்று குறி சொல்வதுதான் குலத் தொழிலாம்.
வருடத்தில் ஆறு மாதம் ஊர் ஊராய், வீடு வீடாய்ச் சென்று என்ன நடக்கப் போகிறது என்று குறி சொல்வார்கள். 'யார் வாயிலும் விழலாம்; ஆனால் கம்மளத்து நாயுடுகளின் வாயில் மட்டும் விழக்கூடாது' என்று பயந்துகொண்டு ஊர் மக்கள் அரிசி, பருப்பு போன்ற தானியங்களும் பணமும் கொடுப்பார்கள். 'வீட்டில் கருப்பு இருக்கிறது, தோஷம் இருக்கிறது; அதை விரட்ட வேண்டுமானால் ஜக்கம்மாவுக்குப் படையல் செய்ய வேண்டும்' என்று கூறி கூடுதலான பணமும் பெற்றுக்கொள்வார்கள். இதுதான் இம்மக்களின் ஓராண்டு வருமானம். அரசு வேலை பெறுவதில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளை ஆரம்பக் கல்வி வரை மட்டுமே படிக்க வைப்பார்கள். மேற்கொண்டு படிப்பது ஜக்கம்மாவுக்குப் பிடிக்காதாம்.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இம்மக்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இம்மக்கள் அதிகம் குடியேற ஆரம்பித்தார்கள். வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் இச்சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் செய்தி. வீட்டில் தெலுங்கு மொழியிலும், வெளியில் தமிழ் மொழியிலும் பேசிவரும் கம்பளத்தார்கள், சாதி வெறியில் தமிழகத்தின் எந்தவொரு ஆதிக்க சாதிக்கும் சளைத்தவர்கள் அல்லர்.
இப்படியான மக்கள் வசிக்கும் அந்த கம்மபட்டியில், அம்மக்களின் வளர்ச்சிக்காகவே தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. தொடக்கப்பள்ளிக்கான இடத்தை கம்மப்பட்டி ஜக்கம்மா வாரிசுகளே அளித்துள்ளனர். இப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக கம்மப்பட்டியிலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மானகசேரியைச் சேர்ந்த மரகதவல்லி பணி நியமனம் செய்யப்படுகிறார். மரகதவல்லிக்கு சமையல் உதவியாளராக சரவணக்குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் கம்மப்பட்டி தொடக்கப்பள்ளிக்குச் சென்று அடுப்பு பற்ற வைத்ததிலிருந்து தீண்டாமையும் பற்றிக்கொண்டது. திடீரென்று பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு நேரத்தில் சத்துணவு சாப்பிடாமல் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். சமைத்த உணவு வீணாததுதான் மிச்சம். அப்புறம்தான் தெரிந்தது, "எஸ்.சி. ஆளுங்க சமைச்ச சாப்பாடு ஜக்கம்மாவுக்கு ஆகாது" என்று சத்துணவு ஊழியர்களிடம் அவ்வூர் மக்கள் சொன்ன செய்தி.
இது குறித்து மரகதவல்லி கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்துள்ளார். அதிகாரிகளோ, "அவுங்க உங்ககிட்ட பிரச்சனை பண்ணாதது வரை அந்த ஊருக்குப் போங்க. கொஞ்சமா சமையல் பண்ணுங்க. பசங்க வந்தால் சாப்பாடு கொடுங்க. இல்லேன்னா சாப்பாட்டை கீழே கொட்டிட்டு வாங்க" என்று, திணிக்கப்படும் நவீன சாதியத் தீண்டாமைக்கு ஆதரவாகவே பேசி அனுப்பியுள்ளனர்.
மரகதவல்லியும் சரவணகுமாரியும் தினமும் பள்ளிக்குச் சென்று ஒரு படி அரிசியை சமைத்துக் கீழே கொட்டுவதுதான் வேலை. அரசுக்குத் தெரிந்தே இதனைச் செய்கிறார்கள். கீழே கொட்டுவதற்காகவே வேலைக்குச் செல்கிறார்கள். ஜக்கம்மா என்கிற தெய்வத்தின் பெயரால் இப்படிச் சாதியப் பார்வையுடன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் அந்தக் கம்மளத்து நாயக்கர்களிடம் இதுவரை அரசு அதிகாரிகளோ மற்ற யாருமோ பேசக்கூட முயற்சிக்காததுதான் வேதனையாக உள்ளது. தொடர்புடைய சத்துணவு ஊழியர்களோ, தங்களை வேறு ஊருக்குப் பணியிட மாற்றம் செய்ய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாழ்த்தப்பட்டோரல்லாத சத்துணவு ஊழியர்களை வரவேற்பதற்காக கே.கம்மப்பட்டி ஊருக்கு வெளியே ஜக்கம்மா காத்துக்கொண்டிருக்கிறாள். அரசோ பின்னால் நின்றுகொண்டு ஜக்கம்மாவுக்கு விசிறிக்கொண்டிருக்கிறது.
ஜக்கம்மாவின் பெயரால், சாமி குத்தம் என்ற பெயரால் புதுவிதமாக சாதியக் வன்கொடுமை நடந்து வருகிறது. இதற்கு அரசே துணை போகிறது. 'தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம்' என  பாடப் புத்தகத்தில் பாடம் சொல்லித் தருகிற இடத்திலேயே தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. அரசுதான் இப்படி என்றால் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகவும் தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதாகவும் தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருவதாகவும் தமிழகத்தில் பீற்றித் திரியும் தலைவர்கள் இச்சாதி வெறி குறித்து கண்டன அறிக்கை கொடுக்கக்கூடத் தயங்குகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள்தான் அந்த ஊருக்குச் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாதியத்தை ஒழிக்காமல் தமிழர்களுக்கான விடுதலையை எப்படிப் படைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
கம்மளத்து மக்களுக்கு ஜக்கம்மாவே பக்கபலமாக இருக்கிறாள்... ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு...? ஜக்கம்மா இது உனக்கே ஞாயமா?
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20558%3A2012-07-22-02-12-36&catid=1%3Aarticles&Itemid=264http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20558%3A2012-07-22-02-12-36&catid=1%3Aarticles&Itemid=264

21 February 2012

கம்யூனிசத்தை அவமதிக்கும் தோழர் தா.பாண்டியன்

thaa_pandian_360
கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான தோழர் ஜீவா அவர்களைப் பற்றி கேட்கக் கேட்க பிரமிப்பாக இருக்கும். அவ்வளவு நேர்மையான - தூய்மையான தலைவராக யாவராலும் மதிக்கப்படுபவராக இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல் அடுத்தடுத்தத் தலைமுறைக்கும் பாடமாக வாழ்ந்தவர் தோழர் ஜீவா.
1960ஆம் ஆண்டு கோவையில் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றச் சென்றிருக்கிறார் தோழர் ஜீவா. அவருடைய எழுச்சிகரமான உரைக்குப்பின், கோவை மாவட்டத்தின் சார்பில் ஜீவா அவர்களிடம் கட்சி வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவருடன் வந்த தோழர்கள் சிலர், “தோழர் சாப்பிடப் போகலாமா?” என்று கேட்கின்றனர். அதற்கு ஜீவா, “உங்களிடம் பணம் இருந்தால் சாப்பிடப் போகலாம்; என்னிடம் இல்லை” என்றிருக்கிறார். உடன் வந்த தோழர்களோ, “இதோ உங்களிடம்தான் இவ்வளவு பணம் இருக்கிறதே” என்று அவர் கையில் இருந்த மஞ்சள் பையைக் காட்டிக் கேட்டார்கள். அதற்கு, “இது என்னுடைய பணம் அல்ல; கட்சிப் பணம். இதை கட்சியில் ஒப்படைக்க வேண்டும்” என்று பதில் அளித்துவிட்டு அங்கிருந்து நடந்தே பேருந்து நிலையத்திற்குச் சென்றுவிட்டார் ஜீவா. இப்போது அரசியல் வகுப்பெடுக்கும் தலைவர்கள் ஜீவாவின் நேர்மையைப் பற்றிச் சொல்லும்போது இச்சம்பவத்தை பெருமிதத்துடன் கூறுவார்கள்.

29 January 2012

முத்துக்குமாரின் கேள்விகள் தொடருகின்றன



2009ஆம் ஆண்டு சனவரி 29. இந்த நாளை உணர்வுள்ள தமிழர் எவரும் மறந்து விட முடியாது.  முத்துக்குமார் சாவடைந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  

'கரும்புலி முத்துக்குமார்' என்று தமிழர்களால் அழைக்கப்படும் அந்த மாவீரன் தன் உடலுக்கு நெருப்பு வைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலை நெருப்பை தமிழகமெங்கும் பற்ற வைத்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன.  3ஆம் ஆண்டு நினைவுநாள் நம் மனசாட்சியைப் பிடுங்கித் தின்றுகொண்டிருக்கிறது.  
இன்றைக்கும் அந்த சாஸ்திரி பவன் அலுவலகத்தைக் கடக்கும்போதும், மூலக்கொத்தளம் இடுகாட்டிற்குச் செல்லும்போதும் நெருப்பை அள்ளித் தின்ற அந்த முத்துக்குமாரின் நினைவுகள் நம்மை அப்படியே சுட்டெரிக்கின்றன. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவக்கிடங்கில் அவனது உடலை கரிக்கட்டையாய் காட்சிக்கு வைத்திருந்தபோது தமிழர்களின் ஒட்டுமொத்த மௌனமும் கரிக்கட்டையாய் அங்கே கிடந்ததை உணரமுடிந்தது. முத்துக்குமாரின் ஈகச் சாவை, தமிழ்த் தீவிரவாதி என்று காவல்துறை திசை திருப்ப முயற்சிசெய்தபோது அந்த மருத்துவமனை வளாகமே தமிழ் உணர்வாளர்களால் கனன்றுகொண்டிருந்ததைக் கண்டுதான் காவல்துறை ஒதுங்கியது.  ஆட்டுவித்துக்கொண்டிருந்த அன்றைய கருணாநிதி அரசும் மௌனித்தது.  இளைஞர்களின் அதிவுயர் கோபம் கொளத்தூர் பகுதியை மட்டுமல்லாமல் சென்னையைத் திணறவைத்தது.  முத்துக்குமாரின் வித்துடல் கொளத்தூரிலிருந்து மூலக்கொத்தளம் இடுகாட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது எத்தனை எத்தனை தடைகள், எத்தனை எத்தனை முழக்கங்கள், எத்தனை எத்தனை இளைஞர்களின் முகங்கள்... நெருப்பே முழக்கமிட்டுப் போவதுபோன்ற உணர்ச்சிப் பிழம்புகள்.

26 January 2012

பழ.நெடுமாறன் அவர்களுக்கு பகிரங்கக் கடிதம்


படம் நன்றி : ஜீனியர்விகடன்
மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் நடராசன் வழியா?

தமிழ்த் தேசியப் பெருந்தலைவர் என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் மரியாதைக்குரிய அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு வணக்கம்.  நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்; விரும்புகிறேன்.
‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு கொடுமை அவுத்துப்போட்டு ஆடுச்சாம்’ என்ற கதையாக இந்துத்துவ-சாதியத்தை அடித்தளமாகக் கொண்ட இந்திய தேசிய கொள்கையிலிருந்தும் பார்ப்பனியக் கொள்கையிலிருந்தும் விடுபட்டு தமிழ்த்தேசியக் களத்திற்கு வந்தால் இங்கும் அதே கொடுமை தலைவிரித்தாடினால் என்ன செய்வதய்யா?  அந்தக் கொடுமைகளை உங்களைப் போன்றவர்களும் முன்னெடுத்துச் செல்வதைப் பொறுக்க முடியாமல்தான், சமூகத்தின் கடைக்கோடியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் விடுதலைச் சிறுத்தைகளில் ஒருவனாகவும் இருந்து தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.
உங்களைப் புண்படுத்தும் நோக்கத்துடனோ, அல்லது திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடனோ இம்மடலை தங்களுக்கு எழுதவில்லை.  உங்களை, உங்களின் அரசியல் பயணத்தை மதிப்பவன் என்கிற உரிமையில் இந்த மடலை எழுதுகிறேன். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களால் பதில் சொல்லப்படுவதில்லை. ஒரே வார்த்தையில் அதை அவதூறு என்று சொல்லாமல் - மௌனமாக இருந்துவிட்டுச் செல்வீர்கள். முன்னர் எல்லா காலத்தையும் விட ஏராளமான இளைஞர்கள் இன்று தமிழ்த் தேசிய அரசியலில் ஈர்ப்பாகி அமைப்புகளுக்கு வருகிறார்கள். அவர்கள் இனியும் ஏமாறக்கூடாது என்பதாலேயே இதை எழுதுகிறேன்.

19 January 2012

தமிழகத்தில் நடப்பது சண்டிராணி ஜெயலலிதா அரசா? மலையாள வெறியன் உம்மன்சாண்டி அரசா?


அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  நஞ்சு கொடுத்துக் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  கழுத்தை நெறித்துக் கொலை செய்வதைப்  படித்திருப்போம். ஆனால் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றிக் கொலை செய்யப்படுவதை இப்போதுதான் தமிழகம் கேள்விப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர்  சாந்தவேல்.  மனைவி சித்ரா, பெண் குழந்தைகள் தட்சனா, சஞ்சனாவுடன் தானுண்டு, தனது பிளம்பர் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார்.  ஒவ்வோர் ஆண்டும் சபரிமலை சென்று அய்யப்பனை வழிபடுவதையும் மற்றொரு முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்.