02 July 2021

ஊபா சட்டம்: மக்கள் போராளி அகில் கோகாய் விடுதலை

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 
அகில் கோகாய் 550 நாட்கள் கழித்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். 
தீர்ப்பை வாசித்த நீதிபதி ப்ரஞ்சல் தாஸ்,
“தீவிரவாத ஆபத்திலிருந்து மக்களை காக்கும் பணியில் நாட்டின் முன்னணி விசாரணை அமைப்பாக உள்ள என்.ஐ.ஏ.வின் செயல்பாடு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. என்.ஐ.ஏ.விடம் எதிர்பார்க்கப்படும் உச்சபட்ச தரத்தை கைக்கொள்ளவேண்டும்" என விமர்சித்துள்ளார்.

சரி, யார் இந்த அகில் கோகாய்?

நாடு முழுக்க குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தபோது, அசாம் மக்களை திரட்டி போராடிய அசாமி இவர்.
தேசவிரோத பாஜக அரசு அகிலை ஊபா சட்டத்தில் கடந்த டிசம்பர் 12, 2019 அன்று கைது செய்து,அவர் மீது 12 வழக்குகள் பதியப்பட்டன. அதில் 2 வழக்குகளில் ஊபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்தது.

சிறையிலிருந்தபடியே ‘ராய்ஜோர்தான்’
என்னும் கட்சியை தொடங்கினார்.
நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அசாமில் சிஏஏ வை எதிர்க்கும் கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்.
சிப்சாகர் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார்.
சிறையிலிருந்தபடியே தொகுதி மக்களிடம் கடிதங்கள் வாயிலாக பரப்புரை செய்தார். 
அகில் கோகாய் அம்மா பிரியடா கோகாய், மனைவி கீதாஶ்ரீ என குடும்பத்தினர் தேர்தல் பரப்புரை செய்தனர். பாஜக வேட்பாளர் சூரபி ராஜ்கோனை 11,875 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சிறையிலிருந்தே அகில் பெற்ற வெற்றி அசாம் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியுள்ளது. இப்போது ஊபா சட்டத்திலிருந்து விடுதலை ஆகியிருப்பது மேலும் எழுச்சியை அசாமியர் பெற்றுள்ளனர்.


விடுதலைக்கு பின்பு ஊடகத்திடம் 
பேசிய அகில் கோகாய், 'தீர்ப்பு எனக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சிறைப்பட்டுள்ளோருக்கும் நம்பிக்கையை தரும். இந்திய அரசு ஊபாவையும் என்.ஐ.ஏவையும் தவறாக பயன்படுத்தியுள்ளது தெளிவாகிறது.
தேசவிரோத பாஜக அரசு இந்த வழக்கை புரிந்து கொண்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்'.

பொடா சட்டம் கடந்த 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் அரசியல் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டு, பின்னர் 2004ல் திரும்ப பெறப்பட்டது.

அது போல வடகிழக்கு மற்றும் காஷ்மீரில் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு சட்ட பாதுகாப்பு தரும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தையும், எதிர் கருத்து கொண்டோரை தேச விரோதிகளாக சித்தரித்து முடக்கும் தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

தேசவிரோத பாஜக அரசு இவற்றை உட்படுத்துமா?

- வன்னி அரசு
  2.7.2021

0 comments:

Post a Comment