Showing posts with label பாஜக. Show all posts
Showing posts with label பாஜக. Show all posts

22 March 2024

அக்யுஸ்ட் பாஜக அஸ்வதாமனின் குற்றப்பின்னணி கதை

திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அ.அஸ்வதாமன் (எ) அக்யுஸ்ட் அஸ்வதாமனின் குற்றப் பின்னணி குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்னரே எனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் வெளியிட்டேன். பலரும் ஊடக விவாதங்களில் இந்த வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பியதும், அதன் பின்னர் ஊடக விவாதங்களுக்கு வருவதையே நிறுத்திக் கொண்டான் அக்யுஸ்ட் அஸ்வதாமன்.



இன்று பாஜக வன்முறை கும்பல் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளான். தலித் பெண்கள் மீதும், குறிப்பாக தனது மனைவிடம் கூட வன்முறையை பிரயோகிக்கும் இந்த நபரின் குற்றப்பின்னணியை விரிவாக பார்ப்போம். 


வழக்கு எண் 1:


கடந்த 14.2.2016 அன்று தனது மனைவி துர்கா மற்றும் எட்டு மாத குழந்தையை, அவரது மாமனார் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாததால், அவர்களை மீட்டு தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார் அக்யுஸ்ட் அஸ்வதாமன்.




22.03.2016 அன்று இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வருகிறது. அரசு வழக்கறிஞர் ஒரு புதிய தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார். அதாவது அக்யுஸ்ட் அஸ்வதாமனின் மனைவியை யாரும் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லவில்லை. அஸ்வதாமன் மீது அவரது மனைவி கொடுத்த வரதட்சனை புகார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தன்னை வரதட்சனை கேட்டு அடித்து துன்புறுத்தும் நிலையில் விவாகரத்து வழக்கு பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுகிறது.

அஸ்வதாமன் வரதட்சணை வழக்கு நகல் 1
அஸ்வதாமன் வரதட்சணை வழக்கு நகல் 2


இதை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் முழுக்க முழுக்க குடும்ப பிரச்சனை. இதில் ஆட்கொணர்வு மனுவைக் கொண்டு தீர்வு சொல்ல முடியாது என்று சொல்லி அக்யூஸ்டு அஸ்வதாமனின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

எட்டு மாத கைக்குழந்தையுடன் இருந்த தனது மனைவியை வரதட்சனை கேட்டு துன்புறுத்தி, அடித்து விரட்டியவர் தான் இந்த அக்யுஸ்ட் அஸ்வதாமன்.



வழக்கு எண் 2:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை தாலுகா, மதியனூர் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன்தனபாக்கியம் தம்பதியினர். இவர்கள் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய மகன் சிவானந்தனை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க விரும்பி, அக்யுஸ்ட் அஸ்வதாமன், அவரது தந்தை அல்லிமுத்து நடத்தும் அருள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு செல்கின்றனர். 13.6.2007 அன்று 70 ஆயிரம் பணத்தை கட்டி மகனை சேர்க்கின்றனர்.


A1 அல்லிமுத்து - A2 அஸ்வதாமன்


அக்யுஸ்ட் அஸ்வதாமனும் வரது தந்தையும் நடத்தும் அந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் போதிய வசதிகள் இல்லை என்பதும், சரியான அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதும் பின்னர் தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கட்டிய பணத்தையும் மாறுதல் சான்றிதழையும் தருமாறு மாணவனின் தாயார் தனபாக்கியம், நிறுவனத்தை அணுகினார்.


அவர்கள் நீண்ட காலம் இழுத்தடித்து 4.1.2008 அன்று தருவதாக தனபாக்கியத்தை வரச்சொல்கின்றனர். அலுவலகத்தில் அஸ்வதாமனும், அவனது தந்தை அல்லிமுத்துவும் இருந்துள்ளனர்


உள்ளே சென்ற தனபாக்கியத்தின் சேலையை பிடித்து இழுத்த அல்லிமுத்து, பறத் தேவிடியா, பணத்த கொடுக்குறதுக்கு உங்கள வரச் சொல்லலடி, உங்கள ஒழித்துக்கட்ட தான் வரச்சொன்னோம் என்று இழிவாக பேசி கன்னத்தில் அறைந்துள்ளார். இப்படி பணம் கேட்டு வந்தால் உயிரோடு விடமாட்டேன் என்று அத்துமீறிய அல்லிமுத்து குறித்து புகார் சொல்வேன் என்று தனபாக்கியம் போராடியுள்ளார். அப்போது அறையில் இருந்த அஸ்வதாமன், உங்கள உயிரோடு விட்டாதாண்டி போலீஸ்ல புகார் கொடுப்பீங்கஎன்று சொல்லி, இரும்பு சுத்தியலை எடுத்து தனபாக்கியத்தை கொலை செய்யும் நோக்கத்தில் தலையில் ஓங்கி அடித்துஒழிந்து போடிஎன்றார்


இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. தனபாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்தவர்கள் அவரை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றினர்.


இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் குற்ற எண்: 12/2008 பதியப்பட்டது. உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு (PRC No.6 of 2009) வந்தது.


இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) அல்லிமுத்துவும், இரண்டாம் குற்றவாளியாக (A2) அஸ்வதாமனும் உள்ளனர். அல்லிமுத்து மீது ... 294, 323, 506(2) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. அஸ்வதாமன் மீது ... பிரிவு 307படி கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கை நடத்தாமல் தாமதப்படுத்தி வந்தான் அக்யுஸ்ட் அஸ்வதாமன். மேலும், தான் பாஜகவில் இருப்பதாகவும், தன் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று தனபாக்கியம் குடும்பத்தினரை ரவுடி கும்பலை வைத்து மிரட்டி வந்தான்.


தங்கள் உயிருக்கு அஞ்சிய தனபாக்கியம் குடும்பத்தினர், தலித்துகளின் பாதுகாவலராக அன்று வலம் வந்த மாநில தலைவர் முருகனுக்கு கடிதம் எழுதினர். கல் உடைக்கும் தனது தந்தை வழி ஒட்டர் சாதி ஆட்கள் மூலம், சுத்தியலை வைத்தே அடித்து கொன்றுவிடுவேன் என்றும், தனது அம்மா வழி வன்னியர் சாதி ஆட்களிடம் சொன்னால் சும்மாவிடமாட்டார்கள் என்றும் அக்யுஸ்ட் அஸ்வதாமன் மிரட்டுவதாக அக்கடிதத்தில் சொல்லியுள்ளார் தனபாக்கியம்.


பாஜக தலைவர் முருகனுக்கு தனபாக்கியம் அனுப்பிய கடிதம் ப.1

பாஜக தலைவர் முருகனுக்கு தனபாக்கியம் அனுப்பிய கடிதம் ப.2


அப்போது பாஜக தலைவர் வேல் யாத்திரையில் பிஸியாக இருந்ததால், தனபாக்கியத்தின் அழுகுரல் அவரிடம் எடுபடவில்லை.


இந்த வழக்கை மேலும் தாமதப்படுத்தும் நோக்கில், தங்கள் மீதான வழக்கு ரத்து செய்யும்படி 2015ஆம் ஆண்டு A1 அல்லிமுத்துவும்,  A2 அஸ்வதாமனும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுகின்றனர்.


வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், 25.01.2022ஆம் ஆண்டு கீழ்கண்ட தீர்ப்பை வழங்குகிறார்.


”இருதரப்பு வாதங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நமக்கு தெரிய வருவது என்னவென்றால், புகார்தாரரான பெண்ணையும் அவரது தாயையும் தங்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் A1 அல்லிமுத்து  ஆபாசமாக பேசி, அடித்து துன்புறுத்தி சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது A2 அஸ்வதாமன் இரும்பு கம்பியை கொண்டு அப்பெண்களை தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டை புகார்தாரரின் தாயும், மேலும் 3 தனித்தனி சாட்சிகளும் உறுதிப்படுத்துகின்றன” 

அக்யுஸ்டுகள் தந்தை - மகன் மீதான வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அக்யுஸ்ட் அஸ்வதாமன் மீதான வழக்கு விவரம் 1

அக்யுஸ்ட் அஸ்வதாமன் மீதான வழக்கு விவரம் 2

அக்யுஸ்ட் அஸ்வதாமன் மீது குற்ற முகாந்திரம் உள்ளது - உயர்நீதிமன்றம்



இன்றும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் A1 அல்லிமுத்து - A2 அஸ்வதாமன் மீதான வன்கொடுமை வழக்கு நடைபெற்று வருகிறது.



இந்த குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளரை நிறுத்தி தான் பெண்களையும் தலித்துகளையும் பாதுகாப்போம் என்று வேடமிட்டு வருகிறது பாஜக கும்பல்.