19 January 2012

தமிழகத்தில் நடப்பது சண்டிராணி ஜெயலலிதா அரசா? மலையாள வெறியன் உம்மன்சாண்டி அரசா?


அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  நஞ்சு கொடுத்துக் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  கழுத்தை நெறித்துக் கொலை செய்வதைப்  படித்திருப்போம். ஆனால் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றிக் கொலை செய்யப்படுவதை இப்போதுதான் தமிழகம் கேள்விப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர்  சாந்தவேல்.  மனைவி சித்ரா, பெண் குழந்தைகள் தட்சனா, சஞ்சனாவுடன் தானுண்டு, தனது பிளம்பர் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார்.  ஒவ்வோர் ஆண்டும் சபரிமலை சென்று அய்யப்பனை வழிபடுவதையும் மற்றொரு முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார். 

26 November 2011

மாவீரர் நாள் சிறப்புப் பாடல் - வன்னிஅரசு


பல்லவி 

புதைகுழி
புதைகுழி
மாவீரர்
புதைகுழி
புதைகுழி

விதை குழி
விதை குழி
மீண்டெழும்
விதை குழி
விதை குழி

கரும்புலி
கரும்புலி
களமாடும்
கரும்புலி
கரும்புலி

பகையழி
பகையழி
வேரோடு
பகையழி
பகையழி

விதையயன விதையயன முளைப்போம்
பகைதனை பகைதனை முடிப்போம்

துயரினைத் துயரினைத் துடைப்போம்
விடுதலை விடுதலை படைப்போம் (புதை குழி)


சரணம் - 1 

எங்களின் மாவீரர் கல்லறைகள் பேசும்
உலகத்தை உலுக்கியே மீண்டெழும் தேசம்
காந்தள் மலர்களின் வாசம் வீசும்
கடலும் வயலும் எம் வசமாகும்

இனியயன்ன
இனியயன்ன
சோகம்Š புலிகள்
இலட்சியப்
பாதையில்
வேகம்

ஒப்பாரி
ஓலங்கள்
போதும் Š இனி
தப்பாது
பகை தலை
சாயும் (புதைகுழி)


சரணம் - 2 

வன்னி முல்லை நிலமெங்கும் வீரம்
விதையுண்ட உயிர்களும் கூடவே முழங்கும்
சிதறிய பனைகளும் துளிர்விட்டு முளைக்கும்
சீறியே புலி பாய்ந்து விழிரெண்டும் திறக்கும்

வெடித்தெழும்
வெடித்தெழும்
புரட்சி - மக்கள்
திரட்சியில்
தமிழீழ
ஆட்சி

பிரபாகரன்
எங்கள்
தலைமை - அந்தத்
தலைமைதான்
விடுதலைப்
புதுமை


- புலம்பெயர்ந்த தமிழர்களால் தயாரிக்கப்பட்டு இலண்டனில் 2011 மாவீரர் நாள் நிகழ்வில் வெளியிடவுள்ள இசைப்பேழைக்காக...

பாடல் - வன்னிஅரசு,
இசை - சாய்தர்சன்,
பாடியவர் - கிருஷ்ணராஜ்

02 November 2011

முருகதாசின் ஏழாம் அறிவில் ஓர் அறிவு "மிஸ்ஸிங்'

""என்னுடைய "தாய்மண்' என்கிற கதையை மட்டும் திரைப்படமாக எடுத்திருந்தால் ஈழமே விடுதலை அடைந்திருக்கும்'' என்றுபுலம்பெயர்ந்த தமிழர்களிடமெல்லாம் நாக்கைத் தொங்கப் போட்டு அலைவதைப் போலச் சொல்லித் திரியும், தங்கர்பச்சானாக இருக்கட்டும்...

""ஈழ விடுதலை அரசியலைப் பரப்புவதற்காக கட்சி ஆரம்பிக்கச் சொன்னவரே அண்ணன் பிரபாகரன்தான்'' என்று மேடைதோறும் முழங்கித் திரியும் "புரட்சித் தலைவியின் அன்புத் தம்பி' சீமானாக இருக்கட்டும்...

26 September 2011

மூளை இல்லாதோர் அணுகவேண்டிய முகவரி: தோழர் தா.பாண்டியன்


Photo : http://www.flickr.com/photos/bhagathk

"ஆட்டுக்கும் நாலு காலு மாட்டுக்கும் நாலு காலுன்னு பெரிய பெரிய தத்துவமெல்லாம் சொல்லுவீங்களே! உங்களுக்கே இந்த நிலைமையா?" - நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படம் முழுக்கப் பேசி வரும் வசனம் இது.

இந்தக் காமெடி போல தமிழக அரசியலிலும் பெரிய பெரிய தத்துவங்களை அவ்வப்போது அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார் மூத்த அரசியல்வாதி தா.பாண்டியன் அவர்கள்.  சொந்த மூளையைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தும் அடுத்தவர் மூளையைப் பயன்படுத்துவதில்லை என்ற பெரிய தத்துவத்தைச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.