05 August 2014
"எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் அச்சத்தைத் தங்களுக்குத்
தெரிவிக்க விரும்புகிறேன். தங்களது
கன்சர்வேட்டிவ் பார்ட்டிக்கு நிதியளிக்கும் முக்கிய நிறுவனமான லைக்கா (LYCA) மொபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேவுக்கும்
நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து எனது
அச்சத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச
விசாரணைக்கு இராஜபக்சேவை உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை நானும்
எழுப்பியுள்ளேன்.
தொலைத் தொடர்பு
நிறுவனமான லைக்கா மொபைல் 2011ஆம் ஆண்டு
தொடங்கி, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு
426,292 மில்லியன் பவுண்ட்ஸ்
நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும், கடந்த ஜூன் 2012
'கார்டியன்' (Guardian) பத்திரிகையில்
கடந்த 3 ஆண்டுகளாக லைக்கா
நிறுவனம் அரசுக்கு எந்த வரியும் செலுத்தவில்லை என்று அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் இராஜபக்சே உறவினர் நிறுவனத்தில்
அதிகப் பங்குகளை வைத்துள்ளது.
இராஜபக்சேவின் மைத்துனர் தலைமை தாங்கும் இலங்கை அரசின் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்
நிறுவனத்தால் முன்னுரிமை அளிக்கப்பட்டுச் செயல்படும் நிறுவனமாக லைக்கா ஃப்ளை (LycaFly) உள்ளது.
காமன்வெல்த் உச்சி மாநாட்டையொட்டி நடைபெற்ற காமன்வெல்த் பிசினஸ் போரம்-2013
(Commonwealth Business Forum-2013) மாநாட்டிற்கு 'கோல்டன் ஸ்பான்சராக' (Gold Sponsor) லைக்கா நிறுவனம் செயல்பட்டுள்ளது. இராஜபக்சே அரசின் பின்னணியில் இயங்கும் லைக்கா
நிறுவனத்திடமிருந்து கன்சர்வேட்டிவ் கட்சி நன்கொடைகளைப் பெற்றிருப்பதால்தான்,
பலத்த எதிர்ப்புகளையும் மீறி காமன்வெல்த்
மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்வதாக அறிவித்திருப்பதில் சந்தேகம் எழுகிறது. இராஜபக்சே அரசுக்கும் லைக்கா மொபைல்
நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தவறும்பட்சத்தில் தாங்கள் எதிர்காலத்தில் மனித உரிமை குறித்து முன்னெடுக்கும் எந்த
முடிவுகளும் கேள்விக்குள்ளாக்கப்படும்" இங்கிலாந்து லேபர் பார்ட்டி நாடாளுமன்ற உறுப்பினர் டாம் பிளங்கின்சாப் கடந்த
நவம்பர் 18, 2013 அன்று இங்கிலாந்து
பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எழுதிய
கடிதத்தில் குறிப்பிட்டிருந்த செய்திதான் இது.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம் குறிப்பிட்டுள்ள லைக்கா நிறுவனத்தின்
பின்னணி என்ன? அந்த நிறுவனத்தின்
இயக்குநர் யார்?
யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர்தான் சுபாஷ்கரன். இவர்தான் இந்த லைக்கா நிறுவனத்தின்
இயக்குநர். இவரது தந்தை அல்லிராஜா - தாய்
ஞானாம்பிகை. சிங்கள ஒடுக்குமுறைக்கெதிராக
விடுதலைப் புலிகளின் போர் வெடித்த பிறகு யாழ்ப்பாணத்தைவிட்டு அகதியாய்
நாடுநாடாய்த் திரிந்தவர்தான் இந்த சுபாஷ்கரன்.
ஆரம்ப காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும்போல இவரும் படாதபாடு
பட்டுக்கொண்டிருந்தார். வெளிநாடுகளுக்கு
ஆட்களை அனுப்புவது, அவர்களைத் தங்க
வைப்பதற்கான இடங்களைப் பிடித்துக்கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து பிழைப்பு
நடத்தி வந்தார். 2003ஆம் ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியரான மிலிந்த் காங்லே உள்ளிட்ட 10 பேரோடு இணைந்து லைக்காடெல் எனும் நிறுவனத்தைத்
தொடங்குகிறார். ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்துத் தரப்பு
மக்களைக் குறிவைத்துத்தான் இந்த வியாபாரத்தைத் தொடங்குவதாக சுபாஷ்கரன்
குறிப்பிடுகிறார்.
பின்னர் 6 ஆண்டுகளில் லைக்கா
நிறுவனம் 1500 நபர்கள் கொண்ட நிறுவனமாக
வலிமைபெற்று, உலகெங்கும் 4000 பணியாளர்களைக் கொண்டு விரிவுபடுத்தப்படுகிறது. லைக்கா மொபைல் (LycaMobile), லைக்கா ஃப்ளை (LycaFly), லைக்கா மணி (LycaMoney), லைக்கா புரொடக்ஷன் (LycaProduction) என்று வகைப்படுத்தி ஐரோப்பிய நாடுகள் முழுக்க நிறுவனத்தின்
கிளைகளைத் தொடங்குகிறார்கள்.
இந்நிறுவனத்தின் தலைவராக சுபாஷ்கரனும், துணைத் தலைவராக பிரேம் சிவசாமி என்பவரும், தலைமை செயல் அதிகாரியாக கிறிஸ் தூளி என்பவரும் அதிகாரப்பூர்வமாகச்
செயல்பட்டு வருகின்றனர். மிகச்
சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டு ஆளும் கட்சிக்கு 426 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடையாகத் தரும் அளவுக்கு
உயர்ந்தது.
இந்த இடத்தில்தான் லேபர் பார்ட்டியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாம், பிரதமர கேமரூனை நோக்கி எழுப்பிய கேள்வி முக்கியத்துவம்
பெறுகிறது.
இலங்கையில் கடந்த 2013 நவம்பரில்
நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் மட்டுமல்ல
உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
கனடா உள்ளிட்ட பல நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிப்படையாக மறுத்ததோடு,
'இனப்படுகொலை நடத்திய இலங்கையை உலக
நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்க வேண்டும்' என்று கண்டனக் குரல் கொடுத்தன. ஆனால், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன், நான் போரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் செல்கிறேன்
என்று அறிவித்துவிட்டு, நேரடியாக போரில்
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். இதைத்தான் நாடகம் என்று கூறி டாம்
கேள்விக்குள்ளாக்குகிறார்.
லைக்கா நிறுவனம் 426 மில்லியன்
பவுண்ட்ஸ் நன்கொடை அளித்ததால்தான் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டதாக
டாம் குற்றம் சுமத்துகிறார்.
காமன்வெல்த் மாநாட்டிற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?
காமன்வெல்த் மாநாட்டுக்கான தேதி அறிவித்தபின் அம்மாநாட்டிற்கான கோல்டன்
ஸ்பான்சரை (Gold Sponsor) லைக்கா நிறுவனம்தான்
வழங்கியது. காமன்வெல்த் மாநாட்டிற்கு
ஸ்பான்சர் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால் அரசியல் அறிவு
இல்லாதவர்கள்கூட லைக்கா நிறுவனத்திற்கும் சிங்கள அரசுக்கும் உள்ள உறவைத்
தெரிந்துகொள்ளலாம்.
Board of Investment Srilanka (Prince Sponsor), AirTel, Bank of Ceylon, Ceylon Sea Board, John Keells, Sri Lanka Port Authority,
Standard Chartered Bank, LycaMobiles (Golden Sponsor), Silver Sponsors:
Brandis, Commercial Bank, Hatton National Bank, Mas Holdings, Mack Woods, Lunch
Sponsor : Al-Futtaim (AMW), ADB, BDBO Lanka, Central Bank of Srilanka, EY,
ILYKA. (Source: http://www.cbcglobal.org/events/details/commonwealth-business-forum-2013#sponsors)
இத்தகைய சிங்கள ஸ்பான்சர் நிறுவனங்களுக்கிடையில் கோல்டன் ஸ்பான்சர் வழங்கிய
ஒரே நிறுவனம் லைக்கா மட்டுமே. அதுவும்
தாமாக முன்வந்து வழங்கிய நிறுவனம் லைக்கா.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம்
பிளெங்கின்சாப் அவர்களுக்கு மட்டுல்ல,
அனைவருக்குமே லைக்கா நிறுவனத்தின் மீது
சந்தேகம் எழத்தான் செய்யும்.
இது மட்டுமல்ல, இங்கிலாந்து இளவரசர்
சார்லஸ் நடத்திவரும் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்-க்கு (British Asian Trust)
1 மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை லைக்கா நிறுவனம்
ஸ்பான்சராக வழங்கியது. இந்த ஸ்பான்சரை
இந்த டிரஸ்ட்டின் அதிகாரப்பூர்வத் தூதரும் இலங்கை கிரிக்கெட் வீரருமான முத்தையா
முரளிதரன் மூலமாக வழங்குகிறார்கள். (Source:http://uk-lycamobile.blogspot.in/2012/07/lycamobile-presents-first-instalment-to.html)
சரி, லைக்கா நிறுவனத்தை நடத்தும்
சுபாஷ்கரன் ஒரு யாழ்ப்பாணத் தமிழர். அவரை
வைத்து இராஜபக்சே அரசு இவற்றை எல்லாம் செய்வதன் நோக்கம் என்ன?
காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு முன்பே இலங்கை அரசால் ஒரு கூட்டம்
நடத்தப்படுகிறது. அக்கூட்டத்தின் முக்கிய
நோக்கம் இலங்கையில் நடைபெற்ற போருக்குப் பின் பொருளாதாரரீதியாக இலங்கையை எப்படி
உயர்த்துவது? பன்னாட்டு வணிகங்களின் முதலீட்டை எப்படி இலங்கைக்குக்
கொண்டு வருவது? இலங்கைக்கு முதலீடு செய்வதில் ஏற்படும் அச்சத்தை எப்படிப்
போக்குவது? என்கிற அம்சங்கள்
விவாதிக்கப்பட்டன. இதன்
தொடர்ச்சியாகத்தான் கடந்த 2013 நவம்பர் 12 முதல் 14 நாட்களில்
காமன்வெல்த் பிசினஸ் கவுன்சில் (Commonwealth Business Council) கூட்டம் கூட்டப்பட்டது.
பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் முக்கிய நிறுவனமாக
லைக்காவும் கலந்துகொண்டது. இந்த வணிக மாநாட்டுக்குத்தான் கோல்டன் ஸ்பான்சரை லைக்கா
நிறுவனம் வழங்கியது. லைக்கா நிறுவனம்
உலகம் முழுக்க வேர் பரப்பியிருப்பதால் இந்நிறுவனத்தை இராஜபக்சே அரசு பயன்படுத்தத்
திட்டமிட்டதன்விளைவுதான், போரில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபாஷ்கரன் நேரடியாக உதவக் களமிறக்கிவிடப்பட்டது.
காமன்வெல்த் பிசினஸ் போரம் 2013 தொடக்கவிழா (Commonwealth Business Forum) |
தனது தாய் ஞானாம்பிகையின் பேரில் தொடங்கப்பட்ட ஞானம் ஃபவுண்டேஷன் (Gnanam Foundation) மூலமாக
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், புத்தளம், திரிகோணமலை மற்றும் வவுனியா மாவட்டத்தில் எந்தத் தொண்டு
நிறுவனத்தின் உதவியுமில்லாமல் ஞானம் ஃபவுண்டேஷனே நேரடியாக நலத்திட்ட உதவிகளைச்
செய்தது. இதுவரை 2000 மதிவண்டிகள், 2000 தையல் எந்திரங்கள், 10000 மாணவர்களுக்கு
பள்ளிப் பைகள், சீருடைகள், 5 இலட்சம் பேனா, 5 இலட்சம் பென்சில்கள், மாலை நேர
வகுப்புகள், மருத்துவ முகாம்கள்,
51 குடும்பங்களுக்கு நிதி உதவிகள், 3000 மில்லியன் பவுண்ட்ஸ் அளவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இத்துடன், தான் படித்த யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்யாலயா
பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களுக்கான
கல்விச் செலவையும் ஏற்றுள்ளது. (Source:http://www.gnanam-foundation.org/lycas-gnanam-foundations-second-phase-gets-underway-with-rs-3000-million/)
வடக்கு மாகாணத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு அமைச்சரவை, சுபாஷ்கரனை அணுகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து
நலத்திட்ட உதவிகளைச் செய்யுமாறு வலியுறுத்தினர்.
ஆனால், சுபாஷ்கரன் அதற்கு உடன்பட
மறுத்துவிட்டு, சிங்கள அரசு மூலமாகவே
ஞானம் ஃபவுண்டேஷனின் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருவதால் பலத்த சந்தேகங்களை
எழுப்பியுள்ளது. இன்றுவரை வடக்கு மாகாண
அமைச்சரவை சுபாஷ்கரனோடு தொடர்புகொள்ள முயற்சிசெய்கிறது. ஆனால், அவரோ தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்து வருகிறார்.
பாதிக்கப்பட்டப் பகுதிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்கூட
அனுமதிக்கப்படாத சூழலில், வடக்கு மாகாண
அமைச்சர்களே குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அனுமதி மறுக்கப்படும் சூழலில், சுபாஷ்கரனும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் இலங்கை
தேசம் முழுக்க சுதந்திரமாகப் போய்வர அனுமதிக்கப்படுவதன் பின்னணி என்ன என்கிற
கேள்வி இயல்பாய் எழுகிறது.
வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்திய இராஜபக்சேவைத்
தண்டிக்கும் வகையிலும் இலங்கையைத் தனிமைப்படுத்தும் வகையிலும் உலகம் முழுக்கப்
போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் லைக்கா நிறுவனம் முலம் இலங்கையில் தொழில்
வளங்களை உருவாக்கவும், தொழில் முதலீட்டாளர்களை
முதலீடு செய்ய வைக்கவுமான தூதராக சுபாஷ்கரன் செயல்பட்டு வருவதாகவும், மேலும் போருக்குப்பின் யுத்தப்பகுதி உள்ளிட்ட இலங்கையைச்
சுற்றிப்பார்க்க லைக்கா நிறுவனம் மூலம் டூரிசம் பேக்கேஜ்களை (Tourism Package) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் லைக்காஃப்ளை (Lycafly) வழங்கி
வருகிறது. (Source:http://www.lycaflyholidays.com/portfolio-view/tour-north-sri-lanka/ and http://www.lycaflyholidays.com/portfolio-view/culture-northeast-sri-lanka/)
இச்செயல் இலங்கை அரசின் போர்க் குற்ற நடவடிக்கைகளை மூடி மறைக்கவும் மறந்து போகவுமான முயற்சியாகக் கருதப்படுகிறது.
இத்தகைய இனப்படுகொலையாளியின் பங்காளியாகச் செயல்பட்டுவரும் லைக்கா குழுமத்தின்
லைக்கா புரொடக்ஷன்ஸ்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தைத்
தயாரிக்கிறது.
தற்போது இத்திரைப்படத்தின் கதை குறித்தோ, அதில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்தோ
விவாதமில்லை. மிகப்பெரிய இனப்படுகொலை
நடத்தியவருக்குப் பின்னணியாக இருக்கும் சுபாஷ்கரன் இப்படத்தைத் தயாரிப்பது
குறித்துத்தான் விவாதங்கள் எழுகின்றன. இதில் இருவேறு கருத்துக்கள்
தேவையில்லை. லைக்கா நிறுவனம் முழுக்க
முழுக்க இராஜபக்சே அரசின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும், ஐங்கரன்
கருணாமூர்த்தியும் முழுப் பூசணிக்காயை அல்ல முழு மலையையே சோற்றில் மறைப்பதுபோல்
லைக்கா நிறுவனத்தைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள். அல்லது இராஜபக்சேவின் இரத்தக் கறையைத் துடைக்க
முயற்சிக்கிறார்கள். இதுவும்
இராஜபக்சேவைக் காப்பாற்றும் ஒரு முயற்சிதான்.
தமிழகத்தில் ஈழ விடுதலைக்காகப் போராடும் அரசியல் கட்சித் தலைவர்களைச்
சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளதாக இயக்குநர் முருகதாஸ் பேட்டியளிக்கிறார். இது முற்றிலும் ஏமாற்று வேலை. படுகொலை நடத்திய இரத்தம் தோய்ந்த கரங்களோடு
தமிழகத்தில் வணிகம் செய்ய, இராஜபக்சே லைக்கா
நிறுவனத்தின் துணையோடு விஜய் - முருகதாஸ் கூட்டணியோடு களம் இறங்கியுள்ளார்கள்.
நாம் என்ன செய்யப் போகிறோம் தமிழர்களே!
03 August 2014
நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தல் பெரும் ஏமாற்றத்தை மட்டுமல்ல மன உளைச்சலையும் தந்தது. மானுட விடுதலைக்கு எதிரான -மனித நேயத்திற்கு எதிரான மதவெறியையும் சாதிவெறியையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதற்காக தன வாழ்நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியாரின் உழைப்பு தமிழகத்தில் வீணாகிவிட்டதே என்கிற வேதனை வாட்டிக்கொண்டே இருக்கிறது.
தந்தை பெரியாரின் கொள்கைகளை செயல் வடிவமாகக் களமாடும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தோல்வி என்பது பல கேள்விகளை முன்னிறுத்துகிறது. தருமபுரியில் சாதிவெறியும் கன்னியாகுமரியில் மதவெறியும் வெற்றி பெற்றதன் மூலம் தந்தை பெரியார்,புரட்சியாளர் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளும் உழைப்பும் தோற்று போய்விட்டன. எத்தனையோ இலக்கியங்கள்,கவிதைகள், சினிமாக்கள்கூட சாதியத்திற்கு எதிராகவும் மதவாதத்திற்கு எதிராகவும் படைக்க பட்டுள்ளன. அவையும் தோற்றுவிட்டதாக தான் பார்க்கமுடிகிறது. சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் அவர்கள் தோற்று போனதைகூட இப்படிதான் வரலாற்று ரீதியாக பார்க்க வேண்டும்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை செயல் வடிவமாகக் களமாடும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தோல்வி என்பது பல கேள்விகளை முன்னிறுத்துகிறது. தருமபுரியில் சாதிவெறியும் கன்னியாகுமரியில் மதவெறியும் வெற்றி பெற்றதன் மூலம் தந்தை பெரியார்,புரட்சியாளர் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளும் உழைப்பும் தோற்று போய்விட்டன. எத்தனையோ இலக்கியங்கள்,கவிதைகள், சினிமாக்கள்கூட சாதியத்திற்கு எதிராகவும் மதவாதத்திற்கு எதிராகவும் படைக்க பட்டுள்ளன. அவையும் தோற்றுவிட்டதாக தான் பார்க்கமுடிகிறது. சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் அவர்கள் தோற்று போனதைகூட இப்படிதான் வரலாற்று ரீதியாக பார்க்க வேண்டும்.
சாதிவெறியை தமது சமூகத்தின் மீது திணித்து அதில் கவுரவம் எனும் விசத்தை விதைத்து அரசியல் பண்ணும் பா.ம.க. ராமதாசின் அயோக்கியத்தனம் மனு தரும காலத்தில் கூட இருந்தது இல்லை. காதலில் கூட அரசியல் பண்ணும் கேவலமான இழி பிறவியாக தமிழக அரசியலில் வளம் வருகிறார். இவரோடுகூட கூட்டு வைப்பவர்களை என்னவென்று சொல்வது?
தருமபுரி நத்தம்சேரியை சூறையாடிவிட்டு வெட்கமே இல்லாமல் சிங்கள இனவெறியை கண்டிப்பதும் இளவரசனை கொன்று விட்டு தமிழகத்தில் படுகொலைகள் அதிகமாக நடப்பதாக அறிக்கை விடுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.(கொலைகார்களே அறிக்கை கொடுப்பது தான்) இத்தகைய சூழலில் தான் "சினேகாவின் காதலர்கள்" திரைப்படம் பார்க்க தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் திரு.கலைகொட்டுதயம் அழைத்திருந்தார். கதைகளமே வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் சினிமா ஹீரோதனமாகதான் இருக்கும். ஆணாதிக்க சினிமாவில் விதி விலக்காக சினேகா ஹீரோ வாக வலம் வருகிறார். சினேகா கல்லூரியில் படிக்கும் போது காதல் , வேலை கிடைத்ததும் காதல் என்று சமூகத்தில் ஒவருவரும் எதிர்கொள்ளும் காதலை கவிதையாக காட்டி இருக்கிறார்கள். "காதலிச்ச உடனே உன்னோட படுதுடனுமா?" என்று சினேகா கேட்பது ஆணாதிக்க சிந்தனை மீது நெருப்பை எறிவது போலுள்ளது . நிறைவாக கொடைக்கானலில் இளவரசன் மீதும் காதல் கொள்கிறாள்.இளவரசன் மறுப்பதற்கான காரணத்தை சொல்லும் போது தருமபுரி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.
செருப்பு தைக்கும் அருந்ததியர் சமூகத்து இளவரசன் மீது காதல் கொள்கிறாள் ஆதிக்க சாதி பெண் ரம்யா. செருப்பு தைக்கும் இடத்திற்கும் இளவரசன் வசிக்கும் சேரிக்கும் தேடி தேடி போய் காதலிக்கும் ரம்யா, இளவரசனை கூட்டிக்கொண்டு போய் பதிவு திருமணம் பண்ணுகிறாள். செய்தியை அறிந்த ரம்யா குடும்பத்தினர் வழக்கம் போல் சாதி வெறியுடன் குதிக்கின்றனர். இச்செய்தியை அறிந்த ரம்யா இளவரசனை மட்டும்தப்பிது போக விட்டு பெற்றோர் தன்னை ஒன்னும் பண்ண மாட்டார்கள் என்று நம்பி மாலையும் கழுத்துமாக வீட்டுக்கு போகிறாள். பயங்கர கோபத்தோடு காத்திருந்த பெற்றோர் "ஏண்டி இப்படி கீழ்சாதிக்கரனை கல்யாணம் முடிச்சு கவுரவத்தை கெடுத்துட்டியே" னு பெட்ரோல் ஊத்தி சொந்த மகளையே எரித்து விட்டு இளவரசனைகொலை செய்ய அலைகின்றனர். சாதிவெறியர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரே நேரடியாக உதவ கத்தியோடு கொடைகானல் போகிறார் . அங்கு இளவரசன் நண்பன் ஒருவனை சந்தித்து தண்ணி வாங்கி கொடுத்து இளவரசனை பற்றி கேட்க நண்பனோ, "உங்க சாதிகவுரவத்த காப்பாத்த ஊரு தாண்டி மலை தாண்டிவருவீங்களோ?" னு கேட்ட அடுத்த நிமிடத்தில் நண்பன் கொலை செய்ய படுகிறான். சாதி இந்துக்களின் எடுபிடியாக அடியாளாக போலீஸ் எப்போதுமே இருப்பதை இக்கதாபாத்திரம் சிறப்பாக அம்பலப்படுத்துகிறது.
பொதுவாக காதலை சொல்லாத எந்த திரைப்படமும் இல்லை என்கிற அளவில் தான் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்ல போனால் காதலை திரைப்படமாக எடுக்க கூடாது என்று தடை விதித்தால் திரைப்பட உலகமே ஸ்தம்பித்து போய்விடும். அந்தளவுக்கு காதல்...காதல்.. என்று காதலித்து கொண்டிருக்கிறார்கள். இச் சூழலில் தான் காதலை வைத்து அதில் சாதிகவுரவத்தை நுழைத்து அருவருப்பான அரசியல் செய்ய ஆரம்பித்தார்.இந்த அருவருப்பை திரையுலகத்தினர் பலர் கண்டித்தாலும் திரைப்படமாக எடுக்க யாரும் துணிய வில்லை.இச்சூழலில் தான் மிக துணிச்சலாக சினேகாவின் காதலர்கள் திரைபடத்தை தயாரித்து இருக்கிறார் அண்ணன் கலைகோட்டுதயம். அவருக்கும் சிறந்த திரைக்கதையோடு சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் விதமாக இயக்கிய அண்ணன் முத்துராமலிங்கன் உள்ளிட்ட திரைப்பட குழுவினரை வரலாறு கண்டிப்பாக வாழ்த்தும்....பாராட்டும்.
26 November 2013
படித்துரைப் பாண்டியும் பழ.நெடுமாறனும்..!
- வன்னிஅரசு
அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது!
தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார். கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார். டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார். அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார். உடனே வடிவேலு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துரை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா? நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்" என்று கத்திக்கொண்டே டீக்கடையை அடித்து நொறுக்கிவிட்டு, "எங்ககிட்டயவே..." என்று கத்திக்கொண்டே தனது கோஷ்டிப் பரிவாரங்களுடன் ஓடி ஒரு மறைவில் இருந்துகொண்டு, தன் கோஷ்டி ஆளிடம், "டேய்... அந்தக் கடைக்காரன் கடையை இழுத்து மூடிவிட்டு ஓடுறானான்னு பார். அவன் ஓடிட்டா அவன் நமக்கு அடிமை, ஓடாவிட்டால் நாம் அவனுக்கு அடிமை" என்று மூச்சிரைக்கச் சொல்வார். கோஷ்டியிலிருந்து ஒருவர் எட்டிப் பார்க்கையில், டீக்கடைக்காரர் கடையை இழுத்து மூடிவிட்டு தனது வேட்டியால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடிப்பார். இதனைப் பார்த்தவுடன் கோஷ்டியில் ஒருவர், "அண்ணே ஓடுறான்ணே!" என்று சொல்வார். அப்போது வடிவேலு மிக உற்சாகமாக, "அப்ப இன்னையிலருந்து நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா" என்று பெரிய ரவுடி போல 'ஃபிலிம்' காட்டுவார்.
படித்துரைப் பாண்டியைப் போல அய்யா நெடுமாறன் தனது படை பரிவாரங்களுடன் தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார். இவ்வளவு காலமும் வீராவேசமாகப் பேசினார்கள். கருணாநிதியை ரவுண்டு கட்டினார்கள். வா... வந்து பார்... என்கிற அளவில் பிளந்து கட்டினார்கள். தமிழர் துரோகி என்றார்கள், தமிழர்களுக்கு எதிரி என்றார்கள்,தமிழகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்றார்கள். உச்சகட்டமாக தெலுங்கர் என்றுகூறி மார் தட்டினார்கள். புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்தால்தான் எல்லாம் மாறும் என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள். இன்னும் கூடுதலாகப் போய் ஜெயலலிதாவை ['ஈழத் தாய்' என்றார்கள். உண்மையான புரட்சித் தலைவி அம்மாதான் என்றார்கள். அதிமுகவினரைவிடக் கூடுதலாக ஜெயலலிதாவை அம்மா அம்மா என்று ஊர் ஊராய் தொகுதி தொகுதியாய் கூவினார்கள். ஈழவிடுதலையை வாங்கித் தருபவர் என்று அடையாளப்படுத்தினார்கள். அம்மா வந்தால் தமிழகத்தில் ஈழவிடுதலைக்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றார்கள். ஏன்... அம்மாவே தலைமை தாங்கி ஈழப் போரை நடத்துவார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.
அம்மா ஆட்சிக்கு வந்தார்; இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்கவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றினார். தீர்மானத்தை வரவேற்று பழ.நெடுமாறன் ஆகா.. ஓகோ.. என வானுக்கும் மண்ணுக்கும் குதித்துக் குதித்து அறிக்கை வெளியிட்டார். எதிலும் இரண்டடி தாவி ஓடநினைக்கும் அண்ணன் சீமான், அதே அம்மாவைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார். அது மட்டுமல்லாது அம்மாவைப் பாராட்டி வேலூரிலிருந்து சென்னை வரை நடை பயணம் வேறு. அம்மாவே நாணி வெட்கப்படுமளவுக்கு புகழாரப் பொதுக்கூட்டங்கள்.
இந்தக் காட்சிகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கின. கடந்த இரண்டாண்டுகளாகவே தமிழகத்தில் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை நடத்த ஈழத்தாய் மறுத்து வருகிறார். மேதகு பிரபாகரன் அவர்களின் படங்களை அச்சிட்டு ஒட்டப்படும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு வருகின்றன. எந்த இடத்திலும் மாவீரர் நாள் விழாவுக்கோ, மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டங்களுக்கோ தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவரும் நெருக்கடிகள் தொடர்கின்றன. இந்நிலையில்தான் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனால் நெடுமாறன் வகையறாக்களோ இத்தகைய எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை. வெற்றி அல்லது வீரச்சாவு என முழங்கி 15 நாட்களாக உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்ட தோழர் தியாகு அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் குதித்தபோதுகூட, அவருக்கு வாழ்த்துச் சொல்லக்கூட நேரமில்லாமல் நெடுமாறன் தஞ்சை விளாரில் தங்கி முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். தமிழர்களின் உணர்வுகளை மதித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே - அதாவது நவம்பர் 13 அதிகாலை - முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர்களையும், பூங்காவையும் தமிழகக் காவல்துறை இடித்துத் தள்ளியது. அங்கிருந்த நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரை, பணி செய்ய விடாமல் தடுத்தாகச் சொல்லி வேனில் அள்ளிக்கொண்டுபோய் ஒரு திருமணத்தில் அடைத்தார்கள். எப்படியும் மாலை 5 மணிக்கு மேல் விட்டுவிடுவார்கள் என்று நினைத்திருந்தவர்களின் நினைப்பில் ஜெயலலிதா மண்ணைப் போட்டார். இரவோடு இரவாக 83 பேரையும் திருச்சி சிறைக்குள் திணித்தார்கள்.
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்தும், நெடுமாறன் உள்ளிட்ட 83பேர் கைதைக் கண்டித்தும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டன. 'டெசோ' சார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கே சென்று பார்வையிட்டு, தமிழக அரசைக் கண்டித்ததோடு, இடிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசே கட்டித் தரவேண்டும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
9 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் பிணையில் வெளிவந்த அய்யா நெடுமாறனை, 'வாராது வந்த மாமணி', 'தமிழ்த் தேசியப் போராளி' ம.நடராசன் சிறைவாயிலிலேயே ஆரத்தழுவி வரவேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் நெடுமாறன், மிகுந்த கோபத்துடனும், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டும், அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். (இந்த இடத்தில் உங்களுக்கு வடிவேலு ஞாபகம் வந்தால் நாம் பொறுப்பல்ல)
"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவாகத்தான் இருக்க முடியும். அவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் முதல்வரைத் தவறாக நினைப்பார்கள்" என்று 'வீராவேசமாகப்' பேசினார். முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்றும், அதிகாரிகள் தன்னிச்சையாகவே இடித்தார்கள் என்றும் நெடுமாறன் கூறுவதன் மூலம் நிகழ்ந்த தவறுகளுக்கு ஜெயலலிதா காரணமல்ல என்று மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறாராம்.
தமிழகத்தை ஆட்சி செய்பவருக்கு தமிழகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் தெரிந்திருக்க வேண்டும்தானே. "அமைச்சரே மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று வெளியில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் மங்குனி அரசியா ஜெயலலிதா? என்ன சொல்ல வருகிறார் நெடுமாறன். ஒன்றுமே தெரியாமல் ஜெயலலிதா ஆட்சிபுரிகிறாரா? அல்லது ஜெயலலிதாவைக் காப்பாற்ற நினைக்கிறாரா? சரி, ஜெயலலிதாவிற்கு தெரியாமல் இடித்தார்கள் என்றால், அய்யா சிறைக்குப் போனது கூடவா அம்மாவுக்குத் தெரியாது. நீதிமன்றத்தில் பிணை கேட்டதுகூடவா தெரியாது? முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பின்போது, அரசு அனுமதி வழங்காததால் அய்யா நீதிமன்றத்திற்குப் போனாரே, இதுகூடவா அம்மாவுக்குத் தெரியாது? கொளத்தூர் மணி அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுகூடவா தெரியாது? இவையும் அதிகாரிகளே தன்னிச்சையாக எடுத்த முடிவுதானா? மாவீரன் நெடுமாறன் இப்படி அந்தர் பல்டி அடித்துப் பேசும் அரசியல்தான் என்ன!
சரி, நெடுமாறன்தான் இப்படி என்றால், வீழ்ந்துவிடாத வீரத்துக்கும், மாண்டுவிடாத மானத்துக்கும் சொந்தக்காரரான சீமான், நெடுமாறன் கைதையொட்டி முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே செய்தியாளர்களிடம் பேசும்போது இந்நிகழ்வுக்கு மத்திய உளவுத்துறைதான் காரணமாக இருக்க முடியும். மத்திய அரசால்தான் தமிழக அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள். இப்போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். நெடுமாறன் எப்படிப் பேசினாரோ அதையே சீமானும் தமிழக அரசுக்கும் முள்ளிவாய்க்கால் இடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்.
இவ்வளவு கடுமையாகவும், தமிழினத்திற்கு விரோதமாகவும் நடந்துகொள்ளும் ஜெயலலிதாவைப் பார்த்து,ஜெயலலிதா செய்வது மக்கள் விரோதம் என்று சொல்லக்கூடத் துணிச்சல் இல்லாதவர்களாக இந்த 23ஆம் புலிகேசிகள் தமிழகத்தில் வலம் வருகிறார்கள். இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒன்றுமில்லை. அடிப்படையில் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புதான். தமிழீழ விடுதலையோ, தமிழர் ஒற்றுமையோ, தமிழின விடுதலையோ, தமிழ்த் தேசிய அரசியலோ.. இந்த நெடுமாறன் வகையறாக்களுக்கு முக்கியமல்ல; கருணாநிதி எதிர்ப்புதான் முக்கியம் என்பதை முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்குப் பின்னான இவர்களின் அரசியல் நமக்கு உணர்த்துகிறது. கலைஞர் கருணாநிதி சாதாரணமாகத் தட்டினாலே அய்யோ இரத்தம்... என்று கூப்பாடு போட்டவர்கள், ஜெயலலிதா உலக்கையை வைத்து இவ்வளவு மோசமாக அடித்தும் தலையில் வருவது தக்காளி சட்னிதான் என்று சிரித்துக்கொண்டே துடைத்துக்கொண்டு வருகிறார்கள்.
இப்போது முதலில் சொன்ன வடிவேலுவின் காமெடிக் காட்சியை நினைத்துப் பார்த்தால், நெடுமாறனின் அரசியல் கண்டு நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.
பாவம்... நெடுமாறன் வகையறாக்களுக்கு 'பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்...' என்ன செய்வது? இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்!
இவர்களது அரசியல் கண்டு ஜெயலலிதாவின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் சொல்கிறது - "எவ்வளவு அடிச்சாலும் நெடுமாறன் தாங்குறாரே... இவர் ரொம்ப நல்லவரு..."
08 November 2013
மாவீரர்கள் என்றாலே நவம்பர் மாதம்தான் நினைவுக்கு வரும். உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் அவரவர் வீட்டுக்குள் மாவீரர்களின் திருவுருவப் படங்களை வைத்துத் தீபம் ஏற்றி வணங்குவார்கள். தமிழீழத்தை அடைய உறுதிமொழியும் எடுத்துக்கொள்வார்கள்.
“இன்று புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக தமது தேசத்தின் விடுதலையை அதிஉன்னதமாக நேசித்து அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள். எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத்திருநாள்..”
என்று மாவீரர்கள் குறித்துப் பெருமையோடு மேதகு பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் உரையாற்றுவார்.
மண்ணை மீட்க வீரச்சாவடைந்த மாவீரர்களை வணங்கி விளக்கேற்றி சிறப்புச் செய்யும் அந்த மகத்துவ நாள்தான் நவம்பர் 27. தமிழீழ மண்ணில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில்தான் தாய்மார்களும் குழந்தைகளும் குடும்பத்துடன் வந்து அந்த மாவீரர்களை வணங்குவார்கள். கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்துவார்கள். அந்தளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ‘மாவீரர்கள்’ இருந்தார்கள்.
ஓர் இலட்சியப் பயணத்தில் தமிழீழத்தின் அடிக்கற்களால் தங்களை விதைத்துக்கொண்ட அந்த மாவீரர்களைப் போலவே பொதுமக்களும் வீரச்சாவடைந்தார்கள்.
விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்த பொதுமக்களுக்குத் தெரியும். எப்போது வேண்டுமானாலும் இனவெறியர்கள் தம்மைத் தாக்குவார்கள் என்று. ஆனாலும் மேதகு பிரபாகரன் கைப்பற்றிய சுதந்திரத் தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வாழ்ந்தார்கள். சிங்களப் பேரினவாதத்தின் கடும் பொருளாதார நெரக்கடியையும் மீறி வாழப் பழகினார்கள். 2008ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் போர் ஒப்பந்தத்தை மீறி போரைத் தொடங்கியபோதும் பொதுமக்கள் அச்சப்படவில்லை. “தாக்குல் நடத்தப் போகிறோம். எல்லோரும் இராணுவப் பகுதிக்குப் பாதுகாப்பாக வந்துவிடுங்கள்” என்று சிங்கள இராணுவம் ஹெலிகாப்டரில் பறந்துவந்து துண்டறிக்கை வெளியிட்டு எச்சரித்தார்கள். ஆனாலும், பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பவில்லை. மேதகு பிரபாகரன் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிட விரும்பவில்லை. 2009 சனவரி 2ஆம் நாள் கிளிநொச்சியை உலக நாடுகளின் துணையுடன் சிங்களப் பேரினவாதம் கைப்பற்றிய பிறகும் பொதுமக்கள் பாதுகாப்புத்தேடி சிங்கள இராணுவம் அறிவித்த பாதுகாப்புப் பகுதிக்குள் செல்ல விரும்பவில்லை. ‘கிபீர்’ குண்டுகளும் ‘ஷெல்’களும் விழுந்தாலும் பொதுமக்கள் கிளிநொச்சியிலிருந்து பரந்தன் வழியாக தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, இரணபாலை, மாத்தளன், புதுமாத்தளன், வலைஞர் மடம், வெள்ளா முள்ளிவாய்க்கால், முள்ளி வாய்க்கால் என்று இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து சென்றார்கள். அந்த இடப்பெயர்வுகளுக்கிடையே எத்தனையோ பேர் ‘கிபீர்’ தாக்குதலில் இறந்தார்கள். விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளில் ‘ஷெல்’ தாக்குதலில் ஆயிரக் கணக்கில் செத்து விழுந்தார்கள்.
தாய் சாக, மகளும் மகனும் தாயைப் புதைக்கக்கூட வழியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு இடம்பெயர்ந்தார்கள். நேற்றுவரை தங்களோடு பேசி ஆறுதல்கூறி ஓடி வந்தவர்கள் செத்து பிணங்களாய் ஆங்காங்கே கிடந்ததைப் பார்த்துக் கண்ணீர்விட்டுக் கடந்துவரத்தான் முடிந்ததே தவிர வேறெதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தார்கள்.
அச்சூழலில்கூடசிங்கள இராணுவப் பகுதிகளில் பாதுகாப்புத் தேடி பொதுமக்கள் செல்ல விரும்பவில்லை. தங்களுடைய தலைவர் மேதகு பிரபாகரன் வழியிலேயே எதற்கும் சமரசமாகாமல் சாகத் துணிந்தார்களே தவிர, சிங்களப் பேரினவாதத்துக்கு அடிபணிய விரும்பவில்லை. அப்படிப் போராளிகளோடு போராளிகளாக மாண்டு மடிந்த பொதுமக்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் மாவீரர்களின் தியாகத்திற்கு இணையானதுதான்.
கொத்துக்குண்டுகளில் செத்து மடிந்தவர்கள் மட்டுமல்லாது, சிங்கள இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பல புலித் தளபதிகளைக் குறிப்பிட்டு, அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று கேட்டு சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனேகம் பேர். பிஞ்சு பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள் என்று தமிழீழத் தேசத்திற்காக வீரச்சாவடைந்தவர்கள் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டும். அப்படி சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக, சமரசமாகாமல் வீரச்சாவடைந்த போராளிகள் உள்ளிட்ட பொதுமக்களை வணங்கி அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்படவுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில், நவம்பர் 8ம் நாள், இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்படவுள்ளது. இதற்கான முழுச் செலவையும் ம.நடராசன் என்பவர் ஏற்றுள்ளார். இவர் தமிழீழப் போராட்டத்தை ஆதரித்தோ போராடியதோ இல்லை. தமிழீழம் குறித்தும் தேசிய இனவிடுதலை குறித்தும் இவருக்கு எவ்வித அரசியல் பார்வையும் இல்லை என்பது தமிழகம் அறியும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் இமானுவேல் சேகரனைக் கொலை செய்த முதன்மைக் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவரின் வழியில் அரசியல் செய்து வருபவர். மருதுபாண்டியர் விழா, பூலித்தேவன் விழா என்று தமிழகத்தில் சாதி அரசியலை கடந்த காலங்களில் நடத்தியவர், நடத்தி வருபவர். சாதியவாதிகளுக்குப் பின்புலமாக இருப்பவர்.
அந்த வகையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை முன்னிறுத்தி நடத்தும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கும் பின்புலமாக இருந்து இந்த செயற்கரிய செயலைச் செய்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றத்திற்காகக் கொடுக்கப்பட்ட விளார் நிலம்கூட மோசடி செய்து வாங்கப்பட்ட நிலம் என்று ம.நடராசன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
எப்படியானாலும் முள்ளிவாய்க்காலில் மாண்டு மடிந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம்கொடுத்து முழுச் செலவையும் பொறுப்பேற்றுக்கொண்ட ம.நடராசன் அவர்களது கொடைக்குணத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
ஆனால், சிங்களப் பேரினவாதத்திற்கு அடிபணியாமல் சமரசமாகாமல் மாண்டு மடிந்த அம்மக்களின் தியாகத்தை அவமதிக்கும் வகையில், ஓர் சாதிய நிலப்பிரபுவிடம் அடிபணிந்து நினைவு முற்றம் அமைப்பதுதான் கவலையளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவிற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத், பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற இந்துத்துவவாதிகளை அழைப்பது தமிழ்த் தேசியத்திற்குக் கேடுவிளைவிப்பது மட்டுமல்லாது, தவறான முன்னுதாரணமுமாகும். இத்தகைய செயல் மேதகு பிரபாகரனின் தமிழ்த் தேசியப் போராட்டத்தையும் அவரது தூய்மையையும் கொச்சைப்படுத்துவதாகத்தான் அமையும்.
பாரதிய ஜனதா கட்சி தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கின்ற கட்சி அல்ல; தமிழீழம் அமைவதையும் விரும்புகிற கட்சி அல்ல. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவோ அதே நிலைப்பாட்டைத்தான் பா.ஜ.க.வும் கொண்டுள்ளது. இதை பழ.நெடுமாறன் அவர்களே தமது ‘உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்’ என்கிற நூலில் தெளிவுபடுத்துகிறார்:
“காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டுமானால் பலமான மத்திய அரசு மூலமே சாத்தியம். அதுவும் தன்னால் மட்டுமே அந்த ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க முடியும் என மார்தட்டுகிறது. மொழிவழி மாநிலங்களை அமைக்க மறுத்த பின்னர் மக்கள் போராட்டங்களின் விளைவாக மொழிவழி மாநிலங்களை அமைக்க ஒப்புக்கொண்ட காங்கிரசுக் கட்சி அம்மாநிலங் களுக்குரிய அதிகாரங்களை அளிக்க இன்னமும் மறுக்கிறது. பா.ஜ.க.வோ மொழிவழி மாநிலங்களை ஒழித்துவிட்டு ஒரே மத்திய அரசின்கீழ் 100 ஜன பாதங்களை அமைக்க வேண்டும் எனக் கூறுகிறது.
ஆக, இரு கட்சிகளுக்கிடையே அதிக வேறுபாடு இல்லை. காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவக் கட்சி. பா.ஜ.க. தீவிரவாத இந்துத்துவக் கட்சியாகும். காங்கிரஸ் கட்சி சமயச் சார்பின்மை முகமூடியணிந்து தனது உண்மை உருவத்தை மறைத்துச் செயற்படுகிறது. பா.ஜ.க.வோ ஒருபோதும் தனது நோக்கத்தை மறைக்காமல் பாசிச கோரமுகத்தை வெளிப்படையாகக் காட்டிச் செயற்படுகிறது. எனவே காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்குமிடையே அதிக வேறுபாடுஇல்லை.” (பக்கம் 745)
என்று மிகத் தெளிவாக விளக்குகிறார்.
அதாவது, காங்கிரசைவிட தீவிர இந்துத்துவக் கட்சி பா.ஜ.க.தான் என்று அய்யா பழ.நெடுமாறன் அம்பலப்படுத்துகிறார். பா.ஜ.க.வைப் பற்றி மேலும் அந்நூலில்,
“இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பல மொழிகள் பேசும் தேசிய இனங்கள் தத்தமக்குரிய பகுதிகளில் தனித்தனித் தேசங்களாக அமைந்திடுமானால் பார்ப்பனிய ஆதிக்கம் சிதைந்து போகும். பாரதப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனியப் பண்பாட்டை நிலைநிறுத்த முடியாது. அந்தந்த மொழிக்குரிய பண்பாடுகள் ஓங்கி வளர்ந்து தாங்கள் நிறுவ முயலும் போலியான பாரதப் பண்பாட்டைச் சிதைத்துவிடும் என இந்துத்துவவாதிகள் கருதுகின்றனர்” (பக். 746)
என்று அம்பலப்படுத்துகிறார்.
அதாவது, தேசிய இனங்கள் பிரிந்துபோக ஒருபோதும் இந்துத்துவவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நெடுமாறன் கூறியிருக்கிறார்.
ஆனால், தமிழ்த் தேசிய இனத்திற்கான நாடாக தமிழீழம் அமைவதை மட்டும் பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளுமா? தனித்தேசத்திற்காக வீரச்சாவடைந்த அம்மக்களின் நினைவைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு பா.ஜ.க.வினர் அழைக்கப்பட்டிருப்பது முரண்பாடு இல்லையா? அவமதிப்பது ஆகாதா?
தமிழீழத் தேசத்திற்காக மிகப் பெரிய அறப்போராட்டத்தை நடத்தியவர் மேதகு பிரபாகரன். சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதலில் இந்துக் கோவில்கள் பல சிதைக்கப்பட்டன. ஏனென்றால் தமிழீழத்தின் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்தான். ஏ9 நெடுஞ்சாலை வழியாக வரும்போது, இடைமறிக்கும் முறிகண்டி முருகன் கோவிலிலிருந்து யாழ்ப்பாணம் கந்தசாமி நல்லூர் கோவில் வரை இந்துக்கோவில்கள்தான். (கிறித்தவத் தேவாலயங்கள் குறைவுதான்). அப்படிப்பட்டக் கோவில்களையெல்லாம் சிங்களப் பேரினவாதம் உடைத்து நொறுக்கியது. முருகன்கோவிலில் முளைத்த அரச மர நாற்றுகளைத் தமிழர்கள் சுத்தம் செய்யும் நோக்கில் பறித்ததற்காக புத்தர் ஞானஒளி அடைந்த அரச மரத்தை இந்துக்கள் பறித்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கொடுமையான காலத்தில்கூட மேதகு பிரபாகரன் அவர்கள் ‘இந்துக்களை கொடுமைப்படுத்துகிறார்கள்’, இந்து மதத்தின் கோவில்களைச் சிங்களமதவாதிகள் இடிக்கிறார்கள் என்று இந்துமதவாதத்தை முன்வைத்து அரசியல் தீர்வை உருவாக்க நினைக்கவில்லை.
சிங்கள மதவாதத்திற்கு எதிராக இந்து மதவாதத்தை ஒருபோதும் பிரபாகரன் முன்வைத்ததில்லை. அப்படி வைத்திருந்தால் இந்தியா முழுவதும் புலிகளுக்குப் பெரும் ஆதரவு உருவாகியிருக்கும். ஒருமுறை சிவசேனா தலைவர் பால்தாக்கரேகூட, “பிரபாகரன் ஒரு இந்து. ஆகவே, விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்” என்று அவரது ‘சாம்னா’ இதழில் எழுதியபோதுகூட பிரபாகரன் இந்துத்துவத்தை முன்வைத்ததில்லை. “தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம்’ என்றுதான் தேசிய இனத்தை முன்வைத்தார்.
Source : Flickr : Arjun Sampath
மதவழியிலோ சாதி வழியிலோ தமிழர்களைத் திரட்டாமல் தேசிய இன அடையாளத்தோடு தமிழர்களைப் போராட்டக் களத்தில் ஒன்று திரட்டினார். அந்த வகையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் என்பது தூய்மையான தேசிய இனப்போராட்டமாகத்தான் உருப்பெற்று வலுப்பெற்றுள்ளது. ஆனால், அய்யா பழ.நெடுமாறன், பா.ஜ.க. புலிகளின் போராட்டத்தை ஆதரித்தது போலவும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் மலரப் போவது போலவும் கற்பிதம் செய்ய முயலுகிறார்.
2000 ஏப்ரல் 22ஆம் நாள் விடுதலைப் புலிகளின் படை சிங்கள இராணுவத்தை ஓடஓட விரட்டி ஆனையிறவு சமரில் வெற்றி பெற்றதையடுத்து யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் முன்னேறினர். யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் உள்ள பளை நகரமும் ஏப்ரல் 30ஆம் நாள் புலிகளால் கைப்பற்றப்பட்டது. யாழ் நகருக்குள் 35,000 சிங்கள இராணுவ வீரர்கள் புலிகளால் முடக்கப்பட்டனர். ஏ9 சாலை முழுவதும் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் தரை வழியாக சிங்கள இராணுவம் யாழ் நகருக்குள் நுழைய முடியவில்லை. 35,000 இராணுவ வீரர்கள் உணவின்றித் தவித்தனர். இராணுவத்தினரின் குடும்பத்தினர் கொழும்புவில் தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில்தான், அன்றைக்கு சிங்களத் தேசத்தின் அதிபராக இருந்த சந்திரிகா உலக நாடுகளிடம் கெஞ்சினார். அப்போது, இந்தியாவின் ஆட்சிபீடத்திலிருந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும் ஓடிப்போய் புலிகளிடமிருந்து இராணுவ வீரர்களைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடினார்.
உடனே பிரதமர் வாஜ்பாயும் கடல்வழியே கப்பல்களை அனுப்பி சிங்கள இராணுவத்தினருக்கு உணவு அனுப்பியதோடு புலிகளின் முற்றுகையிலிருந்தும் காப்பாற்றினார். அப்போது மட்டும் பா.ஜ.க. சிங்கள இராணுவத்தை காப்பாற்றாமலிருந்தால் இன்று இந்த முள்ளிவாய்க்கால் அவலமே ஏற்பட்டிருக்காது. யாழ்ப்பாணத்தையும் புலிகள் கைப்பற்றியிருப்பார்கள். அந்த அளவுக்கு புலிகளின் போராட்டத்தை நசுக்கிய பா.ஜ.க.வினரைத்தான் பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்துப் பெருமைப்படுத்துகிறார்.
இது மட்டுமல்லாமல், பா.ஜ.க. ஆட்சியின்போது கடந்த 2000 ஜூன் 11, 12 ஆகிய நாட்களில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் இலங்கைக்குச் சென்று அதிபர் சந்திரிகாவைச் சந்தித்து உரையாடிவிட்டு புலிகளை ஒடுக்குவதற்காகவும் அந்நாட்டின் வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் சார்பில் 100 மில்லியன் டாலர் கடன் உதவி வழங்குவதாக அறிவித்தார். இப்பயணம் குறித்து ஜஸ்வந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இலங்கையின் ஒற்றுமை மற்றும் எல்லைக்குட்பட்ட ஒழுங்கமைவு குறித்து இந்தியா தொடர்ச்சியாக பொறுப்புணர்வுடன் இருக்கிறது. இலங்கையில் நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசின் ஆதரவு எப்போதும் உண்டு” என்று கூறினார்.
ஜஸ்வந்த்சிங்கின் அந்த இருநாள் பயணம் என்பது இந்திய-இலங்கை என்னும் இரு நாடுகளின் உறவை வலிமைப்படுத்தத்தான் என்றும் கூறினார். புலிகளின் ஆனையிறவு வெற்றிக்குப் பிறகு இந்தப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி விடுதலைப்புலிகளின் போராட்டங்களை முடக்கிய பா.ஜ.க.வைத்தான் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அய்யா நெடுமாறன் அழைத்து விருந்து வைக்கிறார்.
மேலும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்திலிருந்து போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியிலிருந்துகூட அமைச்சர்கள் வாசன், ஏ.கே.அந்தோணி, ஜெயந்தி நடராசன் போன்றோர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால் பா.ஜ.க.வின் தலைவர்களான நிதின்கட்காரி, வெங்கையா நாயுடு, அண்மையில் சேர்ந்த சுப்பிரமணியசாமி உட்பட பலர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்கிறார்கள். இதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
Source : The Hindu
அப்படிப்பட்ட இந்துத்துவ பா.ஜ.க.வைத்தான் நெடுமாறன் அழைத்து தமிழகத்தில் ஓர் அரசியல் ஆபத்தை உருவாக்க முயற்சிக்கிறார். இது முழுக்க முழுக்க தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது மட்டுமல்ல. சமயச்சார்பின்மைக்குப் பெரும் ஆபத்தானதுமாகும். இந்துத்துவத்தை பொது நீரோட்டத்தில் இணைத்தால் தமிழ்நாடு என்ன ஆகும் என்பதை நெடுமாறன் அவர்களே தமது ‘உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்’ நூலில் விளக்குகிறார்:
“உருவாகாத இந்திய தேசிய மாயையில் மயங்கிய தமிழர்கள் தங்களின் தனித்த அடையாளங்களை இழந்தார்கள். மொழி, இனம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றால் தொன்மையும் பெருமையும் பெற்றவர்கள் என்பதை மறந்த நிலைக்குத் தமிழர்கள் ஆளாக்கப்பட்டார்கள். ஆனாலும் இருபதாம் நூற்றாண்டு நெடுகிலும் தமிழறிஞர்களும் தலைவர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ்த்தேசிய உணர்வால் தமிழர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியும் விடுதலை வேட்கையும் துளிர்விட்டுள்ளன. இதை அழிக்க இந்து பாசிசம் உள்நுழைந்துள்ளது.
இந்தியத் தேசியத் தளையில் சிக்கித் தவித்து விடுபடப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மதவெறியூட்டி நிரந்தர அடிமை மயக்கத்தில் ஆழ்ந்த இந்துத்வா முயலுகிறது. இந்த அபாயத்திலிருந்து தமிழர்களைக் காக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியவாதிகளுக்கு உண்டு. அந்தக் கடமையைத் தவறாமல் செய்வோம். தமிழ் மண்ணிலிருந்து இந்து பாசிசத்தை விரட்டியடிப்போம்.” (பக்கம் 752)
இப்படி, இந்து பாசிசத்தை விரட்டியடிப்போம் என்று அறைகூவல் விடுத்துவிட்டு அதே இந்துத்துவவாதிகளுக்கு சிவப்புக் கம்பளம் .. இல்லை.. காவிக்கம்பளம் விரிப்பதன் நோக்கம் என்ன?
அய்யாவின் கதர்ச்சட்டை காவியாக மாறுவதன் உள்நோக்கம் என்ன? ஓர் புதிய அரசியல் அணியைக் கட்டுவதாக இருந்தால் வெளிப்படையாகக் கட்டுங்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மேல் கட்டி மாவீரர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகத்தைக் களங்கப்படுத்தாதீர்கள்.
Subscribe to:
Posts (Atom)