02 August 2011

இணையத்தள வியாபாரிகளே, இன விடுதலைக்கு இரண்டகம் செய்யாதீர்!

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க இரண்டு கொடுமை அம்மணமா ஆடுச்சாம்- இந்த கிராமப்புறத்துப் பழமொழி போல சில இணையத்தள வியாபாரிகள் ஈழத்தமிழர்கள் விடுதலைக்கு எதிராக கொடுமைபுரிந்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் ‘அதிர்வு’, ‘மீனகம்’ என்கிற இணையத்தள வியாபாரிகள். இந்த இணையத்தளங்களை ஆரம்பித்திருப்பதன் நோக்கம் என்ன? ‘விக்கிலீக்ஸ்’ போல சிங்கள இராணுவக் கொடுமைகளை அம்பலப்படுத்துவதற்காகவா?  சிதறிக்கிடக்கிற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கவா?  தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைக்கவா? எதுவுமே இல்லை. பின் எதற்காக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று கோபப்படத்தான் தோன்றுகிறது.

தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழ் இளைஞர்கள் சிலர் யுத்தத்திற்கு முன்பே வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்டார்கள். யுத்தக் களத்தில் சமராட அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடி அங்கு குடியும் கூத்துமாய் வாழ்வைத் தொடர்ந்தார்கள். இப்போது அவர்கள் பொழுது போகாமல் தமிழகத்தில் உள்ள சில ஆதிக்கவாதிகளுக்கு எடுபிடிகளாய் இருந்து கொண்டு இணையத்தளங்களை நடத்துவதுதான் வேதனையிலும் வேதனை.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்தவர். இந்த அர்ப்பணிப்புக்காகத்தான் 2002ஆம் ஆண்டு தமிழர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் எழுச்சித் தமிழரை வன்னிக்கு அழைத்துப் பேசி தமிழகத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் பங்களிப்பைப் பாராட்டி அனுப்பி வைத்தார்.

31 July 2011

நடிகர் விஜயும் தோழர் டி. ராஜாவும்!

தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி இராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழ்நாடெங்கும் 15 லட்சம் பேரிடம் கையயாப்பம் பெற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மூலம் அய்.நா. அவைக்கு அனுப்பும் கையயாப்ப இயக்கத்தினை கடந்த சூலை 12 அன்று சென்னை, பத்திரிகையாளர் மன்றத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார். இனப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகள் மூட்டிய இந்தத் தீ தமிழ்நாடெங்கும் மீண்டும் காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கிறது.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள், இயக்கப் பணிகள், இயக்கத் தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகள், சமச்சீர்க் கல்விக்கான ஆர்ப்பாட்டங்கள், நாடாளுமன்ற நடவடிக்கைகள் என்கிற தமது அன்றாடப் பணிகளுக்கிடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை இலயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, உயர்நீதிமன்ற வளாகம், கடைவீதிகள், இரயில் நிலைங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் கையயாப்பம் பெற்று இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பது குறித்து மக்களிடையே விளக்கிப் பேசிவருகிறார். தலைவர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டிருக்க தொண்டர்களும் அவரவர் வலிமைக்கேற்ப மாவட்டங்களில் கையயாப்ப இயக்கத்தினைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

30 July 2011

சீமான் சொன்னது சரிதானா?


22.06.2011 குமுதம் இதழில்
இரத்தமும் சதையுமாக நம் சொந்தங்கள் தத்தளித்து நின்றபோது, சிங்கள அரசின் சிண்டைப் பிடித்தவர் அவர்(ஜெயலலிதா). எங்களின் இழவு வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வந்த உறவு. அவரை ஆதரித்ததில் என்ன தவறு?
- சீமான்
***
‘ஈழத்தாய்’ ஜெயலலிதாவால் தமிழீழம் கிடைக்கட்டும்!
வன்னிஅரசு, செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
பயங்கரப் பசியோடு உணவு விடுதிக்குச் சென்ற ஒருவன், முதலில் 5 தோசை ஆணையிட்டு சாப்பிட்டான் பசி தீரவில்லை. மீண்டும் 5 இட்லி சாப்பிட்ட பின்னும் பசி அடங்கவில்லை; பூரி சாப்பிட்டான் பசி தீரவில்லை... கடைசியாக ஒரு வடை சாப்பிட்டான். "அப்பாடா வயிறு நிறைந்துவிட்டது. நான் ஒரு முட்டாள். முதலிலேயே வடையை மட்டும் சாப்பிட்டிருந்தால் வயிறு நிறைந்து பசி போயிருக்குமே!" என்று தனக்குள் புலம்பினானாம். இதுபோல இருக்கிறது அண்ணன் சீமானின் கருத்து.

27 July 2011

ராஜபக்சேவை தண்டிக்க முடியும்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்! திருமா வேண்டுகோள்!


ராஜபக்சேவை தண்டிக்க முடியும்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்! திருமா வேண்டுகோள்!


அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு சிங்கள இனவெறி அரசுக்கு வழங்கி வந்த நிதி உதவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இனப்படுகொலை குற்றவாளிகள் இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகளாக விசாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கிறவகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

மனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு இராஜபக்சே கும்பல் உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பின் மூலம் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.