Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

22 July 2012

சமூகப் புரட்சி செய்த போராளித் தந்தையின் நினைவு நாள் வன்னிஅரசு


சூலை 14ஆம் நாளே அங்கனூருக்குப் புறப்பட்டாச்சு...


கடலூர் மாவட்டத்திற்குள் நுழைகிற இடத்திலிருந்து அங்கனூர் வரை ஒரே சுவரொட்டிகள்மயம்தான்... 'சூலை 15ஆம் நாள் அய்யா தொல்காப்பியன் நினைவு நாள்... போராளித் தலைவரை எமக்களித்த போராளித் தந்தைக்கு வீரவணக்கம்!' என்ற வாசகங்களை சுவரொட்டிகள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன. வெற்றிலைக் கறை பற்களுடன் அய்யா தொல்காப்பியன் அவர்களின் சிரிப்பு செம்மண் வரப்புப்போல் இருந்தது. சிரிக்கிறாரா நகைக்கிறாரா என்று தெரியாத அளவுக்கான சிரிப்புடன் சுவரொட்டி எம்மை வரவேற்றது.

19 January 2012

தமிழகத்தில் நடப்பது சண்டிராணி ஜெயலலிதா அரசா? மலையாள வெறியன் உம்மன்சாண்டி அரசா?


அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  நஞ்சு கொடுத்துக் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  கழுத்தை நெறித்துக் கொலை செய்வதைப்  படித்திருப்போம். ஆனால் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றிக் கொலை செய்யப்படுவதை இப்போதுதான் தமிழகம் கேள்விப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர்  சாந்தவேல்.  மனைவி சித்ரா, பெண் குழந்தைகள் தட்சனா, சஞ்சனாவுடன் தானுண்டு, தனது பிளம்பர் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார்.  ஒவ்வோர் ஆண்டும் சபரிமலை சென்று அய்யப்பனை வழிபடுவதையும் மற்றொரு முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார். 

27 August 2011

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு!


பேரறிவாளன், சாந்தன், முருகன்  
மரண தண்டனையை நீக்க வலியுறுத்தி
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 
மரண தண்டனை ஒழிப்பு மாநாடு!

மறைமலைநகரில் நாளை (28-8-2011) நடைபெறுகிறது!


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையை நீக்கி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இந்திய அரசு ஒட்டுமொத்தமாக மரண தண்டனைக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தியும் சென்னை மறைமலைநகரில் நாளை (28Š8Š2011) ஞாயிறு மாலை 5 மணியளவில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
 

22 August 2011

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி துத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி துத்துக்குடி மாநகராட்சி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் தமிழினிழன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆறுமுக நாயனார் முன்னிலையில் நடைபெற்றது . அதில் மடிப்பாக்கம் ச . வெற்றிசெல்வன் , வன்னியரசு , முரசு தமிழப்பன் கண்டன உரையாற்றினார் . 100 கும் மேற்பட்ட தமிழ் ஆர்வாளர்கள் அதில் கலந்துகொண்டனர் . 


சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி விருதுநகர்ல் ஆர்ப்பாட்டம்

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில்  விருதுநகர் தேசபந்து மைதானத்தில்  ஆர்ப்பாட்டம் இன்றுக காலை 11 மணிக்கு  நடந்தது. 

 விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளார் தமிழரசு தலைமை தாங்கினார். சிவக்காசி ராஜா வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் கட்சியில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு கலந்துகொண்டு  உறையாற்றினார்.



20 August 2011

பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள்


மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் 20.08.2011 அன்று தொடர் முழக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பனியனை அளிக்கப்பட்டது.