22 August 2011

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி விருதுநகர்ல் ஆர்ப்பாட்டம்

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில்  விருதுநகர் தேசபந்து மைதானத்தில்  ஆர்ப்பாட்டம் இன்றுக காலை 11 மணிக்கு  நடந்தது. 

 விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளார் தமிழரசு தலைமை தாங்கினார். சிவக்காசி ராஜா வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் கட்சியில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு கலந்துகொண்டு  உறையாற்றினார்.



20 August 2011

பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள்


மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் 20.08.2011 அன்று தொடர் முழக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பனியனை அளிக்கப்பட்டது. 



13 August 2011

இன்னும் ஏனடா தகுதி - திறமைன்னு பினாத்துறீங்க!

  “பார்ப்பனியத்தின் இனவெறி எந்த வடிவத்திலும் தாக்கும்; எந்த நேரத்திலும் தாக்கும்” என்பார் அய்யா பெரியார். இப்போது ‘ஆரக்ஷன்’ என்னும் இந்தித் திரைப்படத்தின் மூலம் புதிய உத்தியாய் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறார்கள் வடக்கு ஆரியவாதிகள். அந்தத் தாக்குதலுக்கு, ‘திருப்பி அடி’ என்று கற்றுக்கொடுத்த தலைவர் எழுச்சித்தமிழர்வழிவந்த விடுதலைச்சிறுத்தைகள் எதிர்த்தாக்குதலைக் கொடுத்திருக்கிறார்கள்.

12 August 2011

`ஆராக்ஷன்' திரைப்படத்திற்கு எதிர்ப்பு! நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கைது

இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களோடும், தலித் மக்களை சிறுமைப்படுத்தும் காட்சிகளோடும் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஆராக்ஷன்’ திரைப்படத்துக்கு உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய அரசுகள் தடைவிதித்துள்ளன. தமிழ்நாட்டிலும் இத் திரைப்படத்துக்கு தடைவிதிக்கக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக இன்று காலை 12-8-2011 கலை 10 மணியளவில் சென்னை சத்யம் திரையரங்கம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.