26 November 2011

மாவீரர் நாள் சிறப்புப் பாடல் - வன்னிஅரசு


பல்லவி 

புதைகுழி
புதைகுழி
மாவீரர்
புதைகுழி
புதைகுழி

விதை குழி
விதை குழி
மீண்டெழும்
விதை குழி
விதை குழி

கரும்புலி
கரும்புலி
களமாடும்
கரும்புலி
கரும்புலி

பகையழி
பகையழி
வேரோடு
பகையழி
பகையழி

விதையயன விதையயன முளைப்போம்
பகைதனை பகைதனை முடிப்போம்

துயரினைத் துயரினைத் துடைப்போம்
விடுதலை விடுதலை படைப்போம் (புதை குழி)


சரணம் - 1 

எங்களின் மாவீரர் கல்லறைகள் பேசும்
உலகத்தை உலுக்கியே மீண்டெழும் தேசம்
காந்தள் மலர்களின் வாசம் வீசும்
கடலும் வயலும் எம் வசமாகும்

இனியயன்ன
இனியயன்ன
சோகம்Š புலிகள்
இலட்சியப்
பாதையில்
வேகம்

ஒப்பாரி
ஓலங்கள்
போதும் Š இனி
தப்பாது
பகை தலை
சாயும் (புதைகுழி)


சரணம் - 2 

வன்னி முல்லை நிலமெங்கும் வீரம்
விதையுண்ட உயிர்களும் கூடவே முழங்கும்
சிதறிய பனைகளும் துளிர்விட்டு முளைக்கும்
சீறியே புலி பாய்ந்து விழிரெண்டும் திறக்கும்

வெடித்தெழும்
வெடித்தெழும்
புரட்சி - மக்கள்
திரட்சியில்
தமிழீழ
ஆட்சி

பிரபாகரன்
எங்கள்
தலைமை - அந்தத்
தலைமைதான்
விடுதலைப்
புதுமை


- புலம்பெயர்ந்த தமிழர்களால் தயாரிக்கப்பட்டு இலண்டனில் 2011 மாவீரர் நாள் நிகழ்வில் வெளியிடவுள்ள இசைப்பேழைக்காக...

பாடல் - வன்னிஅரசு,
இசை - சாய்தர்சன்,
பாடியவர் - கிருஷ்ணராஜ்

02 November 2011

முருகதாசின் ஏழாம் அறிவில் ஓர் அறிவு "மிஸ்ஸிங்'

""என்னுடைய "தாய்மண்' என்கிற கதையை மட்டும் திரைப்படமாக எடுத்திருந்தால் ஈழமே விடுதலை அடைந்திருக்கும்'' என்றுபுலம்பெயர்ந்த தமிழர்களிடமெல்லாம் நாக்கைத் தொங்கப் போட்டு அலைவதைப் போலச் சொல்லித் திரியும், தங்கர்பச்சானாக இருக்கட்டும்...

""ஈழ விடுதலை அரசியலைப் பரப்புவதற்காக கட்சி ஆரம்பிக்கச் சொன்னவரே அண்ணன் பிரபாகரன்தான்'' என்று மேடைதோறும் முழங்கித் திரியும் "புரட்சித் தலைவியின் அன்புத் தம்பி' சீமானாக இருக்கட்டும்...

26 September 2011

மூளை இல்லாதோர் அணுகவேண்டிய முகவரி: தோழர் தா.பாண்டியன்


Photo : http://www.flickr.com/photos/bhagathk

"ஆட்டுக்கும் நாலு காலு மாட்டுக்கும் நாலு காலுன்னு பெரிய பெரிய தத்துவமெல்லாம் சொல்லுவீங்களே! உங்களுக்கே இந்த நிலைமையா?" - நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படம் முழுக்கப் பேசி வரும் வசனம் இது.

இந்தக் காமெடி போல தமிழக அரசியலிலும் பெரிய பெரிய தத்துவங்களை அவ்வப்போது அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார் மூத்த அரசியல்வாதி தா.பாண்டியன் அவர்கள்.  சொந்த மூளையைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தும் அடுத்தவர் மூளையைப் பயன்படுத்துவதில்லை என்ற பெரிய தத்துவத்தைச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

25 September 2011

தமிழ்த் தேசியவாதிகளே! சேரித் தமிழர்களுக்காகவும் ஒரு சொட்டுக் கண்ணீர்விடுங்கள்!


உங்கள் வீடு சாதி வெறியர்களால் கொளுத்தப் பட்டிருக்கிறதா?  அந்தக் கொளுத்தப்பட்ட வீட்டிலிருந்து பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள துணிகளைப் பார்த்துக் கதறியிருக் கிறீர்களா?  வீட்டில் இருந்த கொஞ்சம் அரிசியும் அந்த நெருப்பில் "கருகிப்'' போனதை முகர்ந்திருக்கிறீர்களா?  எரிகின்ற சேரிச் சாம்பலுக்குள் கிடக்கிற 50 பைசா, 1 ரூபாய் பைசாக்களைத் தேடியிருக்கிறீர்களா?

ஒப்பாரியும் ஓலமுமாய் வழிந்தோடும் கண்ணீருடன் உங்கள் தாய் கதறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?

20 September 2011

'நம்புங்கய்யா... நானும் ரவுடிதான்!'

cartoon bala
'அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பத்திரண்டு அரிவாளாம்!' - ஊரையும் மரத்தையும் சுற்றித் திரிகிற ஒன்றுக்கும் உதவாத ஊதாரிகளைப் பார்த்து ஊர்ப் பெரிசுகள் இப்படித்தான் கிண்டலிப்பார்கள்.  சுருக்கமாக 'கைப்புள்ள வடிவேலு'வைப் போன்ற கேரக்டர்களைத்தான் இப்படிச் சொல்வார்கள்.

தமிழக அரசியலிலும் ஒரு கைப்புள்ள சுற்றிக்கொண்டு திரிகிறார்.  அவர்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!  காங்கிரஸ் கட்சி ஏதோ தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கவே முடியாத கட்சி போலவும், எல்லா கட்சிகளும் காங்கிரஸ் வந்தால்தான் ஜெயிக்கவே முடியும் என்று கெஞ்சுவது போலவும் இளங்கோவன் உதார் விட்டுக்கொண்டு திரிகிறார்.  கைவிலங்கு உடைஞ்சதாகவும், விடுதலை அடைந்து விட்டதாகவும், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் உளறிக்கொண்டு திரிகிறார்.  ஏதோ தனித்துப் போட்டியிட்டு 10 மாநகராட்சிகளையும், 152 நகராட்சிகளையும், ஒட்டுமொத்த ஊராட்சிகளையும் கைப்பற்றுவது போல காமெடி செய்து வருகிறார்.


18 September 2011

மாறாதய்யா மாறாது!


"அம்மா முன்ன மாதிரியெல்லாம் இல்ல... முதிர்ச்சியாவும் பொறுப்பாவும் நடக்கிறாங்க" - இது ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் ஊடகவியலாளர்களின் முதல் சந்திப்பில் செய்தியாளர்கள் அதிசயமாகப் பேசக்கொண்டது.  "இனி வாரம் ஒரு பிரெஸ் மீட்" என்று ஜெயலலிதா அம்மையார் அங்கே அறிவித்ததோடு சரி, இன்றுவரை பிரெஸ் மீட் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

100 நாள் ஆட்சியைப் பற்றிக் கூறுகிறபோது, "அம்மாவிடம் மாற்றங்கள் தெரிகிறது!" என்றுதான் சரத்குமாரிலிருந்து த.மு.மு.க. ஜவாகிருல்லா வரை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பெருமையடித்துக் கொண்டார்கள்.


17 September 2011

லெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - மூன்றாம் நாள்


“இனிமேல் என்னைத் தண்ணீர் குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம்…… சரியோ?…… உண்ணாவிரதம் என்றால் என்ன? …… தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான்…… இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் என்றால் அதற்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது…… இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல…… வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது.”


***

நேரடியாக மோதிக் களம் காண்கிற 'கபடி' அரசியல்தான் சிறுத்தைகளுக்குத் தெரியும்!


'நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அரிசி கொண்டு வா! இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம்!' என்கிற எனது கட்டுரைக்கு மறைமுகமாகப் பதில் சொல்ல முனைந்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன் அவர்கள்.  ஆனால் யமுனா ராஜேந்திரனுக்கு தமிழக அரசியல் இயக்கங்களின் அரிச்சுவடியோ, அதன் இயங்குதளம் குறித்த புரிதலோ இல்லை. அதனால்தான் அரசியல் இயக்கங்களின் ஒற்றுமையின்மையை அறிவுலகினரின் கையெழுத்து அறிக்கையோடு ஒப்பிடுகிறார்.  அநீக்கு எதிரான ஓர் அறிக்கையை எழுதி அதை இணையம் வழியே அனுப்பி வெவ்வேறு தத்துவார்த்தக் கோட்பாடுகளைக் கொண்ட முரண்பட்ட சிந்தனைவாதிகளிடம் கையெழுத்து வாங்குவதையும், வெகுசன மக்களிடையே அரசியல் செய்யும் அரசியல் அமைப்புகளின் கூட்டியக்கத்தையும் ஒன்றுபோலப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் எழுதியிருக்கிறார். அறிக்கைதான் ஒற்றுமையின் அடையாளம் என்றால் அந்த ஒற்றுமை அரை நூற்றாண்டு காலமாக தமிழக கட்சிகளிடையேயும், தமிழ் அமைப்புகளிடையேயும் உள்ளது என்று ஆணித்தரமாக சொல்வேன் யமுனாவுக்கு.  ஏனென்றால் சம காலத்தில் நாம் எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளிலும் எல்லா அரசியல் கட்சிகளுமே அவரவர் கண்டன அறிக்கையை வெளியிடுகின்றன.  காங்கிரஸ் கட்சி கூட ஈழத் தமிழர் பிரச்சனையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. யமுனாவின் அளவுகோலின்படி சுயநலம் துறந்த உயரிய நோக்கம் கொண்ட அரசியல் ஒன்றை அறிக்கைகளே தீர்மானிக்கும் என்றால் நான் சொல்வது சரிதானே?


16 September 2011

லெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - இரண்டாம் நாள் உரை


னது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நான் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.

15 September 2011

லெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போரை தொடங்கினார்


லெப் கேணல் திலீபன் வான் நல்லூர் கந்தசாமி கோயிலில் கீழ் வரும் ஐந்து காரங்களை முன்வைத்து 15.09.1987 அன்று சாகும்வரை உண்ணாநிலை அறப்போரை தொடங்கிய நாள் இன்று. 


1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

13 September 2011

பேய் அரசாண்டால்...


இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் அரச பயங்கரவாதம் காக்கிச் சட்டை வடிவத்தில் தலித்துகளைக் கொன்று குவிக்குமோ என்று தெரியவில்லை?

ஜெயலலிதா அம்மையார் அரியணைக்கு வந்ததும் வராததுமாய் தலித்துகளின் இரத்தத்தை தமிழகத்தின் வீதிகளில் தெளித்திருக்கிறார். 

மாவீரன் இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளான செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து காலை முதலே எழுச்சிகரமான உணர்ச்சிகளுடன் பரமக்குடியை நோக்கி ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் வாகனங்களில் அணிவகுக்க ஆரம்பித்தனர்.  தம்மைத் தலைநிமிர வைத்த அத்தலைவனின் நினைவுநாளில் அஞ்சலி செலுத்தத்தான் எவ்வளவு ஆர்வத்துடனான கடமை!  மக்கள் திரள் கட்டுக்கடங்காமல் போனது. 

10 September 2011

சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரனின் ஈகத்திலிருந்து பாடம் படிப்போம்!


குடிநீர்க் கிணறுகளில் மலத்தை வீசினார்கள்; குடியிருக்கும் வீடுகளை எரித்தார்கள்; ஒருவர்கூட வெளியில் வரமுடியவில்லை; வெளியில் வந்தவர் ஒருவர்கூட உயிருடன் திரும்பவில்லை; வெட்டி சாலையில் போட்டார்கள்; பெண்கள் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை; மரண ஓலங்களும் ஒப்பாரிகளும் வீதிகளை முற்றுகையிட்டன; மாடுகளும் ஆடுகளும் ஆங்காங்கே செத்துக் கிடந்தன; குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் காட்டிலும் மேட்டிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள்; போலீசும் இராணுவமும் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இக்கொடுமைகள் எல்லாம் எங்கு நடந்தன?

08 September 2011

“நான் உமி கொண்டு வருகிறேன்! நீ அரிசி கொண்டு வா! இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்!

  “நான் 
  உமி கொண்டு வருகிறேன்!
  நீ அரிசி கொண்டு வா!
  இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்!

  என்கிற கதையாகப் போய்க்கொண்டு இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்.

  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு இந்திய குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது முதலே தமிழ்நாட்டுத் தமிழர்களின் இரத்தம் சூடேறியது. தமிழீழ ஆதரவு இயக்கங்கள் தனித்தனியாகப் போராட்டங்களை நடத்தின.

  விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 19.8.2011 அன்று சென்னையிலும் 22.8.2011 அன்று தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளும் பா.ம.க.வும் இணைந்து தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சார்பில் ‘மரணதண்டனை ஒழிப்பு மாநாடு' என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை ஒருங்கிணைத்தன!  மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

06 September 2011

பெண்கள் சுதந்திரமாகப் ‘பற’க்கட்டும்


தூக்குக் கொட்டடியின் கீழ் நிற்கும், நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 19.8.2011ஆம் நாள் சென்னையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 22.8.2011ஆம் நாள் தமிழகம் முழுக்க விடு தலைச்சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.      

27 August 2011

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு!


பேரறிவாளன், சாந்தன், முருகன்  
மரண தண்டனையை நீக்க வலியுறுத்தி
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 
மரண தண்டனை ஒழிப்பு மாநாடு!

மறைமலைநகரில் நாளை (28-8-2011) நடைபெறுகிறது!


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையை நீக்கி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இந்திய அரசு ஒட்டுமொத்தமாக மரண தண்டனைக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தியும் சென்னை மறைமலைநகரில் நாளை (28Š8Š2011) ஞாயிறு மாலை 5 மணியளவில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
 

26 August 2011

யோக்கியன் வர்ரான்... சொம்ப எடுத்து உள்ள வை!


இப்பொழுது புதிய மகான் ஒருவர் தோன்றியிருக்கிறார். 70 வயதுக்கு மேல் அவருக்கு திடீர் ஞானோதயம் கிளம்பி நாட்டைப் பீடித்துள்ள கொடிய நோயை ஒழிக்கக் கிளம்பியுள்ளார்... மன்னிக்க... படுத்துள்ளார். அந்த மகான்தான் அன்னா அசாரே! "ஊழல்' என்கிற நோயை ஒழிக்கத்தான் இப்படிச் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் அவர்.

ராஜீவ்காந்தியின் "போஃபர்ஸ்' ஊழல் நாட்டை உலுக்கியபோது இதே மகான் அன்னா அசாரே இந்தியாவில்தான் இருந்தார். ராஜீவின் அம்மா இந்திராகாந்தி "முந்த்ரா' ஊழல் செய்தபோதும் இந்த மகான் இந்தியாவில்தான் இருந்தார். அப்போதெல்லாம் இந்த மகானுக்கு எந்த ஞானோதயமும் ஏற்படவில்லை. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலிருந்து மொழிவழி தேசிய இன உணர்வு தீவிரமடைந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இந்தியத் தேசியத்தைக் காக்க அன்னா அசாரேவைக் களம் இறங்கியுள்ளது இந்துத்துவக் கும்பல். தேசியக் கொடிகளோடு தெருத் தெருவாக ஊழலை ஒழித்து இந்தியாவைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் "காவி' மகான்கள்.

சரி, அந்த மகான்கள் தெருவில் கிடக்கிறார்கள்.. விடுங்கள். இன்னும் கொஞ்சம் மகான்கள் கிளம்பியிருக்கிறார்கள். இந்த மகான்கள் ஊழலை ஒழிக்க ஆதரவு தரக் களம் இறங்கி இருக்கிறார்கள். பாவம்... நேர்மையாக உழைத்து கருப்புப் பணம் எதுவும் இல்லாமல் அரசுக்கு முறைப்படி வருமான வரி செலுத்தி, தாம் சம்பாதித்தது இவ்வளவுதான் என்று வெளிப்படையாகப் பல முறை மக்களுக்கு அறிவித்த திரைப்படத் துறையைச் சார்ந்த மகான்கள்தான் ஊழல் ஒழிப்புக்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள்.
புகைப்படம் : தினகரன்
சூப்பர் ஸ்டார் ரஜினி ஊழலுக்கு எதிராக வாய் திறந்து அன்னா அசாரேவைப் புகழ்ந்து வழக்கம்போல் ஓர் அறிக்கை வெளியிட்டு போராட்டத்தை முடித்துக் கொண்டார். கமல்ஹாசன் அப்படியே அறிக்கையோடு முடித்துக்கொண்டார். நடிகர்கள் சூர்யா, மாதவன், சேரன் உள்ளிட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஊழலை ஒழிக்கக் களம் இறங்கியுள்ளனர். இந்தத் திரைத்துறை மகான்களின் ஒரு நாள் போராட்டத்தோடு தமிழகத்தில் ஊழல் ஒழிந்து விட்டது. தமிழ்நாடு "சுபிட்சமாக' மாறிவிட்டது. அதனால் ஒரு நாளோடு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்கள். புதுதில்லியில் ஊழல் அதிகம் இருப்பதால் அங்கே உண்ணாவிரதம் தொடர்கிறது.

அந்த உண்ணாவிரத மேடையே ஒரு ஹீரோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து ஒரு "ஹீரோ' வந்து "சிறப்புத் தோற்றத்தில்' தோன்ற மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருந்தது. தெற்கு நோக்கி எல்லோரும் தவம் இருந்தார்கள். எப்படி வருவாரோ அந்த ஹீரோ! கடல் வழியே "சுறா'வாக வருவாரா? தரை வழியே குதிரையில் "வேட்டைக்காரனாக' வருவாரா? நாட்டைக் காக்கும் "காவலனாக' வருவாரா? என்றெல்லாம் அன்னா அசாரே உட்பட எல்லோரும் தவமாய்த் தவமிருந்தார்கள்.

படப்பிடிப்புகளை அவசர அவசரமாக இரத்து செய்துவிட்டு விமானம் ஏறி வந்தேவிட்டார் அந்த ஹீரோ! ஆம்! "இளைய தளபதி' விஜய், ராம் லீலா பந்தலுக்குச் சென்று அசாரேவை வாழ்த்தினார்... மீடியாக்களில் முகம் காட்டினார்... வந்த வேலை முடிந்தது... திரும்பி விட்டார்.
புகைப்படம் : நக்கீரன்
நடிகர் விஜய்யின் நாட்டுப் பற்றைத்தான் என்னவென்று சொல்வது? ஊழல் மீது அவருக்கிருந்த கோபத்தைத்தான் எப்படிச் சொல்வது? "மாண்புமிகு மாணவன்' படத்தில் நடித்த விஜய்க்கு அப்போது 19 வயதாம். (இப்போது என்ன வயது என்று யாரும் கேட்டு விடாதீங்கண்ணா...) அந்தப் படத்திலிருந்து இப்போது நடித்து வரும் "நண்பன்' வரை அவரது சம்பளம் என்னவென்று வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? அரசுக்கு உண்மையான வருமான வரி எவ்வளவு கட்டி உள்ளார் என்று சொல்ல முடியுமா? தாம் சம்பாதித்த பணமும் சொத்து மதிப்பும் இவ்வளவுதான் என்று வெளிப்படையாக அறிவிக்க முடியுமா?

ஊழல் என்பதே உழைப்புச் சுரண்டலிலிருந்துதான் வருகிறது. நடிகர் விஜய் உழைப்புச் சுரண்டல் செய்யாமல் முறையாக உழைத்த சொத்துக்கள் தானா அவரது சொத்துக்கள் அனைத்தும்? ஒவ்வொரு ரசிகனின் ரசனையையும் ஏமாற்றி காசாக்கி ஊழல் பெருச்சாளியாக வலம் வரும் விஜய்க்கு மட்டுமல்ல ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர், நடிகையர் அனைவருக்குமே இது பொருந்தும்.

நாம் வாழும் சமூகத்தில் எவ்வளவோ சமூகப் பிரச்சனைகள் நம் முன்னே கிடக்கின்றன. நடிகர்கள் தினமும் செல்லும் வீதிகளில்தான் "நடைபாதைக் குடும்பங்கள்' வசிக்கின்றன. அவர்களைப் பார்த்தும் பாராமல்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள் இந்த மனிதநேயர்கள். வறுமை ஊழலை விடக் கொடுமையானது இல்லையா? இன்னமும் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பிளாட்பாரங்களில் குடித்தனங்கள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன!

இந்த நடிகர்களுக்கு இரக்கமே இல்லையா? தாம் வாழ்கிற சமூகத்தில் சக மனிதர்களுக்குக் குடியிருக்க வீடே இல்லை. ஆனால் இவர்கள் கெஸ்ட் அவுஸ்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் கூத்தடிப்பதே ஒரு ஊழல் இல்லையா?

தாம் வாழ்கிற சமூகத்தில் சக மனிதன் வாயில் இன்னொரு மனிதன் மலத்தை சாதியின் பெயரால் திணிப்பதை பார்த்தும், கேட்டும், அமைதி காப்பது நியாயம்தானா? ஊழலைவிடக் கொடியது வறுமை. வறுமை, ஊழலை இவற்றை விடக் கொடியது சாதியக் கொடுமை.

இந்தக் கொடிய சமூகக் கொடுமைகளை தமிழ்நாட்டிலிருந்தே பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டு அல்லது அதற்கு எந்த வகையிலாவது உடந்தையாக இருந்துவிட்டு இப்போது ஊழலுக்காகப் போராடப் புறப்படுவது திரைப்படங்களில் ஆங்காங்கே வரும் வடிவேலு காமெடி போல் இல்லையா?

"யோக்கியன் வர்ரான் சொம்ப எடுத்து உள்ள வை!'ங்கிற கதையா இருக்கு இந்த நடிகர்களின் கதை.

படத்துல மட்டும் நடியுங்கள் நடிகர்களே!

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர் 

*

22 August 2011

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி துத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி துத்துக்குடி மாநகராட்சி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் தமிழினிழன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆறுமுக நாயனார் முன்னிலையில் நடைபெற்றது . அதில் மடிப்பாக்கம் ச . வெற்றிசெல்வன் , வன்னியரசு , முரசு தமிழப்பன் கண்டன உரையாற்றினார் . 100 கும் மேற்பட்ட தமிழ் ஆர்வாளர்கள் அதில் கலந்துகொண்டனர் . 


சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி விருதுநகர்ல் ஆர்ப்பாட்டம்

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில்  விருதுநகர் தேசபந்து மைதானத்தில்  ஆர்ப்பாட்டம் இன்றுக காலை 11 மணிக்கு  நடந்தது. 

 விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளார் தமிழரசு தலைமை தாங்கினார். சிவக்காசி ராஜா வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் கட்சியில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு கலந்துகொண்டு  உறையாற்றினார்.



20 August 2011

பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள்


மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் 20.08.2011 அன்று தொடர் முழக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பனியனை அளிக்கப்பட்டது. 



13 August 2011

இன்னும் ஏனடா தகுதி - திறமைன்னு பினாத்துறீங்க!

  “பார்ப்பனியத்தின் இனவெறி எந்த வடிவத்திலும் தாக்கும்; எந்த நேரத்திலும் தாக்கும்” என்பார் அய்யா பெரியார். இப்போது ‘ஆரக்ஷன்’ என்னும் இந்தித் திரைப்படத்தின் மூலம் புதிய உத்தியாய் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறார்கள் வடக்கு ஆரியவாதிகள். அந்தத் தாக்குதலுக்கு, ‘திருப்பி அடி’ என்று கற்றுக்கொடுத்த தலைவர் எழுச்சித்தமிழர்வழிவந்த விடுதலைச்சிறுத்தைகள் எதிர்த்தாக்குதலைக் கொடுத்திருக்கிறார்கள்.

12 August 2011

`ஆராக்ஷன்' திரைப்படத்திற்கு எதிர்ப்பு! நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கைது

இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களோடும், தலித் மக்களை சிறுமைப்படுத்தும் காட்சிகளோடும் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஆராக்ஷன்’ திரைப்படத்துக்கு உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய அரசுகள் தடைவிதித்துள்ளன. தமிழ்நாட்டிலும் இத் திரைப்படத்துக்கு தடைவிதிக்கக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக இன்று காலை 12-8-2011 கலை 10 மணியளவில் சென்னை சத்யம் திரையரங்கம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

02 August 2011

இணையத்தள வியாபாரிகளே, இன விடுதலைக்கு இரண்டகம் செய்யாதீர்!

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க இரண்டு கொடுமை அம்மணமா ஆடுச்சாம்- இந்த கிராமப்புறத்துப் பழமொழி போல சில இணையத்தள வியாபாரிகள் ஈழத்தமிழர்கள் விடுதலைக்கு எதிராக கொடுமைபுரிந்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் ‘அதிர்வு’, ‘மீனகம்’ என்கிற இணையத்தள வியாபாரிகள். இந்த இணையத்தளங்களை ஆரம்பித்திருப்பதன் நோக்கம் என்ன? ‘விக்கிலீக்ஸ்’ போல சிங்கள இராணுவக் கொடுமைகளை அம்பலப்படுத்துவதற்காகவா?  சிதறிக்கிடக்கிற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கவா?  தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைக்கவா? எதுவுமே இல்லை. பின் எதற்காக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று கோபப்படத்தான் தோன்றுகிறது.

தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழ் இளைஞர்கள் சிலர் யுத்தத்திற்கு முன்பே வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்டார்கள். யுத்தக் களத்தில் சமராட அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடி அங்கு குடியும் கூத்துமாய் வாழ்வைத் தொடர்ந்தார்கள். இப்போது அவர்கள் பொழுது போகாமல் தமிழகத்தில் உள்ள சில ஆதிக்கவாதிகளுக்கு எடுபிடிகளாய் இருந்து கொண்டு இணையத்தளங்களை நடத்துவதுதான் வேதனையிலும் வேதனை.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்தவர். இந்த அர்ப்பணிப்புக்காகத்தான் 2002ஆம் ஆண்டு தமிழர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் எழுச்சித் தமிழரை வன்னிக்கு அழைத்துப் பேசி தமிழகத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் பங்களிப்பைப் பாராட்டி அனுப்பி வைத்தார்.

31 July 2011

நடிகர் விஜயும் தோழர் டி. ராஜாவும்!

தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி இராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழ்நாடெங்கும் 15 லட்சம் பேரிடம் கையயாப்பம் பெற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மூலம் அய்.நா. அவைக்கு அனுப்பும் கையயாப்ப இயக்கத்தினை கடந்த சூலை 12 அன்று சென்னை, பத்திரிகையாளர் மன்றத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார். இனப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகள் மூட்டிய இந்தத் தீ தமிழ்நாடெங்கும் மீண்டும் காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கிறது.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள், இயக்கப் பணிகள், இயக்கத் தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகள், சமச்சீர்க் கல்விக்கான ஆர்ப்பாட்டங்கள், நாடாளுமன்ற நடவடிக்கைகள் என்கிற தமது அன்றாடப் பணிகளுக்கிடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை இலயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, உயர்நீதிமன்ற வளாகம், கடைவீதிகள், இரயில் நிலைங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் கையயாப்பம் பெற்று இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பது குறித்து மக்களிடையே விளக்கிப் பேசிவருகிறார். தலைவர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டிருக்க தொண்டர்களும் அவரவர் வலிமைக்கேற்ப மாவட்டங்களில் கையயாப்ப இயக்கத்தினைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

30 July 2011

சீமான் சொன்னது சரிதானா?


22.06.2011 குமுதம் இதழில்
இரத்தமும் சதையுமாக நம் சொந்தங்கள் தத்தளித்து நின்றபோது, சிங்கள அரசின் சிண்டைப் பிடித்தவர் அவர்(ஜெயலலிதா). எங்களின் இழவு வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வந்த உறவு. அவரை ஆதரித்ததில் என்ன தவறு?
- சீமான்
***
‘ஈழத்தாய்’ ஜெயலலிதாவால் தமிழீழம் கிடைக்கட்டும்!
வன்னிஅரசு, செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
பயங்கரப் பசியோடு உணவு விடுதிக்குச் சென்ற ஒருவன், முதலில் 5 தோசை ஆணையிட்டு சாப்பிட்டான் பசி தீரவில்லை. மீண்டும் 5 இட்லி சாப்பிட்ட பின்னும் பசி அடங்கவில்லை; பூரி சாப்பிட்டான் பசி தீரவில்லை... கடைசியாக ஒரு வடை சாப்பிட்டான். "அப்பாடா வயிறு நிறைந்துவிட்டது. நான் ஒரு முட்டாள். முதலிலேயே வடையை மட்டும் சாப்பிட்டிருந்தால் வயிறு நிறைந்து பசி போயிருக்குமே!" என்று தனக்குள் புலம்பினானாம். இதுபோல இருக்கிறது அண்ணன் சீமானின் கருத்து.

27 July 2011

ராஜபக்சேவை தண்டிக்க முடியும்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்! திருமா வேண்டுகோள்!


ராஜபக்சேவை தண்டிக்க முடியும்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்! திருமா வேண்டுகோள்!


அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு சிங்கள இனவெறி அரசுக்கு வழங்கி வந்த நிதி உதவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இனப்படுகொலை குற்றவாளிகள் இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகளாக விசாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கிறவகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

மனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு இராஜபக்சே கும்பல் உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பின் மூலம் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

26 July 2011

திரைப்பட கலைஞர்களிடம் கையொப்பம் பெறும் பணி ....

25 July 2011

சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபச்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு விஜய் எதிர்ப்பு



இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கையொப்ப இயக்க பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று திரைப்பட கலைஞர்கள் இயக்குனர் மணிவண்ணன், செல்வமணி & ரோஜா , நடிகர் சத்தியராஜ் ஆகியோரிடம்  கையொப்பங்கள் பெறப்பட்டன. ஆர்வமுடன் அனைவரும் கையெழுத்திட்டனர்.

ஆனால் திருவல்லிக்கேணியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்க சென்றபோது அவர் தனக்கு இதில் ஆர்வமில்லை என கூறி கையெழுத்திட மறுத்துவிட்டார்.

04 February 2011

”அண்ணன் ஏன் சாகனும்; நான் சாகிறேன்”


ஈழத்தில் போரை நிறுத்த வலியுறுத்தி எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சனவரி15ஆம் நாள் உண்ணாநிலை அறப்போரை மறைமலைநகரில் தொடங்கிய அந்த எழுச்சிநாளில் மேடைக்கு அருகிலேயே நின்றிருந்தான் தம்பி முத்துக்குமார்.

வன்னிஅரசண்ணா அண்ணன உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லுங்க நான் சாகிறேன்என்றான்.


03 February 2011

கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன?


கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? கருத்துத் திணிப்பு வன்முறையாளர்களுக்கு பதிலடி!
- வன்னிஅரசு

""உயரிய நோக்கத்திற்காக பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை துரோகிகளும் எதிரிகளும் திசைமாற்ற நினைப்பார்கள். அவற்றையயல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இலக்கை அடைய முடியும்!''
மேதகு பிரபாகரனின் இந்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் பயணித்துக்கொண்டிருக்கிறது. சாதியற்ற தமிழ்த்தேசம் படைக்க தமிழ்நாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகளாய் களமாடிக் கொண்டிருக்கிறோம்.


12 January 2011

திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்


மீனகம் இணைய தளம் வெளியிட்டு இருந்த இராவணன் எழுதிய கட்டுரைக்கு போதிய விளக்கமும் பதில்களும் கொடுத்த பின்னரும் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக விமர்சனத்தை வைக்கும் கட்டுரைகளை வெளியிடும் மீனகமும்,சாதிய கண்ணோட்டத்தில் பதிலுரைத்து வரும் இராவணனும் தம் பொது முகத்தை இழந்து நிற்கிறார்கள்.. சாதி ஒழிப்பை கொள்கையாக ஏற்று கொண்டமேதகு பிரபாகரன் வழிநடத்தும் ஈழ தேசத்தில் இது போன்றசாதியவெறியர்களுக்கு இடமில்லை.